நீட் தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு தனியார் பள்ளி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது . முதலிடம் பிடிப்பதற்கு பள்ளி சார்பில் வழங்கப்பட்ட 100% உதவித்தொகையே காரணம் என்று மாணவி கூறியுள்ளாா்.
ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற தீபிகா என்ற மாணவி நடந்து முடிந்த நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் முதல் முயற்சியிலேயே 720க்கு 700 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்திலேயே முதல் இடத்தை பிடித்துள்ளார்.
அகில இந்திய அளவிலும் 61வது இடத்தை பிடித்துள்ளாா். பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது அப்போது பள்ளிக்குப் பெருமையை சேர்த்த மாணவி தீபிகாவிற்கு பள்ளி தலைவர்,முதல்வர் உள்ளிட்டோர் சால்வை அணிவித்தும் இனிப்புகளை வழங்கி பாராட்டினர் .
மாணவி 10 ஆம் வகுப்பு பொது தோ்வில் 491 மதிப்பெண் பெற்றதால் பள்ளி சார்பில் 100% கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டதே வெற்றி பெற்றதற்கு காரணம் என மாணவி தீபிகா தெரிவித்துள்ளார். மாணவி தீபிகா மருத்துவராகி மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதே விருப்பம் என்றும் கூறியுள்ளார்.