இந்திய விமானப்படை சாகச நிகழ்வில் உயிரிழப்பு குரல் கொடுத்த ரத்னகுமார்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

இந்திய விமானப்படை சாகச நிகழ்வில் உயிரிழப்பு குரல் கொடுத்த ரத்னகுமார்!நேற்று (அக்டோபர் 6) இந்திய விமானப்படையின் 92 வது கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் இந்த நிகழ்வு நடைபெற்றது. பல்வேறு வகையான விமானங்கள் இந்த சாகசத்தில் ஈடுபட்டன. இந்த நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரைக்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விமான சாகசங்களை காண மக்கள் பலரும் படையெடுத்து வந்த நிலையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அந்த வகையில் உலகத்திலேயே அதிக மக்கள் பார்த்து ரசித்த சாகச நிகழ்ச்சி என்ற சாதனையை படைத்துள்ளது. இந்த நிலையில் தான் அந்த துயர சம்பவமும் நடந்தது. அதாவது மெரினா விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண வந்த 230 பேருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்ட நிலையில் 93 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. இந்த தகவல் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விமான சாகச நிகழ்ச்சிக்காக போதுமான ஏற்பாடுகள் செய்யப்படாததே இதற்கு காரணம் என அரசியல்வாதிகள் பலர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல இயக்குனரும் எழுத்தாளருமான ரத்னகுமார் தனது சமூக வலைதள பக்கத்தில், “எளிய மக்களின் ஒரே பொழுதுபோக்கு இடம் மெரினா. அங்கு காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களின் வார இறுதியில் ஏர்ஷோ பார்க்க கூடும் கூட்டத்தின் அளவை சரியாக கணித்திருக்க வேண்டும். இன்னமும் பறக்கும் விமானத்தை அண்ணாந்து பார்க்கும் 5 அப்பாவி மக்களின் உயிர்கள் போயிருக்கின்றன. கூட்டத்திற்கு பயந்தே நான் இந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. இது ஆரோக்கியமான உணர்வும் அல்ல. கேலிக்கைக்கு கூட்டம் கூடவே பயம் ஏற்பட்டால். நாளை ஞாயத்திற்கு எவ்வாறு கூடுவார்கள்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

 

Video thumbnail
அவளை எதுவும் தடுக்கவில்லை... அவள் சொன்ன முதல் வார்த்தையே... 'அப்பா'தான்! | appa | love | kavithai |
07:16
Video thumbnail
கடற்கரை சுத்தம் செய்யும் பணியில் ரெஜினா.... | cleaning | marina | sup club | regina |
00:37
Video thumbnail
ஜூன்-4 பின்னர் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைமை என்ன ஆகும்? | ADMK | Again Sasikala | BJP | Congress |
06:22
Video thumbnail
ஆவடி அருகே இரட்டை கொலை - காரணம் என்ன? Double murder near Avadi - what is the reason? | avadi |
03:11
Video thumbnail
2026 அதிமுகவின் வியூகம் மாறுமா? திமுக செய்ய வேண்டியது என்ன? | dmk | admk | strategy | Part - 2
14:01
Video thumbnail
உள்ளாட்சி நிர்வாகத்தில் குளறுபடி..திமுக திருத்தி கொள்ள வேண்டும்.. DMK needs to be corrected |admk|
13:01
Video thumbnail
சாதிவாரி கணக்கெடுப்பு... ராகுல் காந்தி உறுதி.. வடமாநிலங்களில் விவாதமாக மாறியது... | bjp | congress |
07:53
Video thumbnail
நம்பிக்கை இழந்த மோடி..மோடியின் இன வெறி பேச்சால் ராகுல் பிரதமராக வாய்ப்பு..| bjp | congress | korea |
06:44
Video thumbnail
பாஜக 150 -க்கு மேல் தாண்டாது... வட மாநில ராஜபுத்திர மக்கள் கொந்தளிப்பு... | bjp | congress | musk |
13:14
Video thumbnail
மாறுகிறது களம்..Elon musk கொடுத்த Shock.அடுத்த பிரதமர் ராகுல் காந்தியை சந்திக்க Elon musk திட்டம்
02:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img