கனமழை காரணமாக பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அக்டோபர் 15-17 வரை கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுமென மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) தெரிவித்துள்ளது.
பாலத்தில் நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம் இல்லை என தாம்பரம் மாநகர காவல்துறை அறிவிப்பு.
அனைத்து முனையங்களிலிருந்தும் முதல் மெட்ரோ ரயில் காலை 5 மணிக்கும், கடைசி மெட்ரோ ரயில் இரவு 11 மணிக்கு புறப்படும் எனவும் அட்டவணைகள் அனைத்தும் வானிலை நிலையை பொறுத்து வழக்கமான சேவைக்கு மாற்றியமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.