இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்டுள்ள பதிவு ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோரின் நடிப்பில் வெளியான ஓ- மை- கடவுளே திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்கியவர்தான் அஸ்வத் மாரிமுத்து. இவர் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திலேயே ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் அஸ்வத் மாரிமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில், சிம்புவிற்காக ஸ்கிரிப்ட் ஒன்றை எழுதியிருப்பதாகவும் சிம்பு அந்தப் படத்திற்கு தயாரானால் படத்தை விரைவில் தொடங்குவோம் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அஸ்வத் மாரிமுத்து மீண்டும் தனது எக்ஸ் தள பக்கத்தில், “டிராகன் படத்திற்கு பிறகு” என்று குறிப்பிட்டு பட்டாசுகளின் குறியீடுகளை பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நெல்சனுக்கும், ரஜினிக்கும் இந்தப்…
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண்…
கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது. சமீபத்திய ஒப்பந்தம்…
தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் அரசியல் மாநாட்டை அக்டோபர் -27 ல் நடத்தவுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அருகில்…
விமல் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் விமல் தமிழ்…
சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்களையும், பெரும் முதலீடுகளையும் சீனாவில்தான் பெரும் அளவில் வைத்திருந்தனர். சீனாவில் முதலீடு செய்வதும்…