நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் . குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற்று இருந்தாலும் அவருக்கும் விஜய்க்குமான வசனங்கள் பல அர்த்தங்களை தருவதாக ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது
அவரிடம் கோட் படத்தில் வரும் காட்சி குறித்தும் அதில் உள்ள வசனம் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சிவகார்த்திகேயன், “முதலில் அந்த காட்சியில் நான் நடித்ததற்காக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதற்காக தளபதி விஜய்க்கும் வெங்கட் பிரபுவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார்.
அதைத்தொடர்ந்து அடுத்த தளபதி நீங்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அடுத்த தளபதி எல்லாம் இல்ல. ஒரே தளபதி தான். ஒரே தல தான். ஒரே சூப்பர் ஸ்டார் தான். ஒரே உலக நாயகன் தான். அடுத்த என்பதற்கு வாய்ப்பே கிடையாது” என்று கூறினார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் நிலையில் இப்படம் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நெல்சனுக்கும், ரஜினிக்கும் இந்தப்…
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண்…
கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது. சமீபத்திய ஒப்பந்தம்…
தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் அரசியல் மாநாட்டை அக்டோபர் -27 ல் நடத்தவுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அருகில்…
விமல் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் விமல் தமிழ்…
சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்களையும், பெரும் முதலீடுகளையும் சீனாவில்தான் பெரும் அளவில் வைத்திருந்தனர். சீனாவில் முதலீடு செய்வதும்…