செய்திகள்

திருநின்றவூரில் மழை நீரில் மூழ்கிய 2000 வீடுகளை பார்வையிட்ட துணை முதல்வர் – நேரில் ஆறுதல்.

திருநின்றவூரில் மழை நின்றாலும் துயரங்கள் போகவில்லை; 2000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை துணை முதல்வர் உதயநிதி நேரில் பார்த்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். ஆவடி அடுத்த திருநின்றவூர் நகராட்சி, 14, 15, 16, 17 வது வார்டுகளில் உள்ள பெரியார் நகர், முத்தமிழ் நகர், கன்னிகாபுரம் மற்றும் சுதேசி நகரில் 2500 வீடுகள் உள்ளன. இங்கு, ஒவ்வொரு ஆண்டும் மழையால் திருநின்றவூர் ஈசா ஏரி நிரம்பி குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது உருவான மிக்ஜாம் புயலால், டிச. 4, 5 தேதிகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 57 செ.மீ., மழை பெய்தது. இதன் காரணமாக மேற்கூறிய குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து, முட்டிவரை தண்ணீர் தேங்கி பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ராட்சத மோட்டார்கள் வாயிலாக, தண்ணீரை வெளியேற்ற வழிவகை செய்தனர்.

அதேபோல், திருநின்றவூர் நகராட்சி, 21, 27 வார்டில் இந்திரா நகரில் 2000 வீடுகள் உள்ளன. இந்த பகுதியும் ஒவ்வொரு மழைக்கும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு குடியிருப்பை சுற்றி 5 அடிக்கு மேல் வெள்ளம் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில் அன்னை இந்திரா நகர் மற்றும் மேற்கூறிய பகுதியில் குடியிருப்பைச் சுற்றி தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

இந்திரா நகரில் மட்டும் சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம், அனெக்ஸ் 3, 7 ல் பகுதிகளில் ‘பொக்லைன்’ இயந்திரம் வாயிலாக மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். திருநின்றவூர் நகராட்சியை பொறுத்தவரை பல மாதங்களாக நிரந்தர நகராட்சி கமிஷனர் மற்றும் போதிய அதிகாரிகள் இல்லாததால், மழை வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் இன்னும் துவங்கவில்லை என வார்டு உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்த ஆண்டு திருநின்றவூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் உள்ள மழைநீர் வடிகால் மட்டும் 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. இதை தவிர, மழைக்காலத்தில் குடியிருப்புகளில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற 3.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்திரா நகரில் 1866 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் மற்றும் இந்திரா நகர் முதல் நெமிலிச்சேரி கால்வாய் வரை 926 மீட்டர் நீளத்திற்கு அமைக்கும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கைகள் அனுமதி பெற அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் இன்னும் துவங்காததால், இந்த மழைக்கும் திருநின்றவூர் நகராட்சி பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலையில் திடீரென்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருநின்றவூர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழைநீரை அகற்றும் பணியை பார்வையிட்டார். பின்னர் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இது குறித்து வார்டு உறுப்பினர் ஒருவர் கூறுகையில். மற்ற உள்ளாட்சி பகுதிகளில், கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பை கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருநின்றவூர் நகராட்சியில், நிரந்தர அதிகாரிகள் இல்லாததால் பணிகள் திட்டமிடுவது மற்றும் செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 835 ஏக்கர் கொண்ட திருநின்றவூர் ஈசா எரியும் 70 ஆண்டுகளாக தூர் வாராமல் உள்ளன.இதனால் சாதாரண மழைக்கே தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Newsdesk

Recent Posts

பகையாளியை பங்காளியாக்கிய இந்தியா- முதன் முறையாக முன் வந்த சீனா..!

கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது. சமீபத்திய ஒப்பந்தம்…

அக்டோபர் 22, 2024 4:18 மணி

ஆலோசகர் இல்லாமல் தடுமாறும் தலைவா் விஜய் – தவெக முதல் அரசியல் மாநாடு பரபரப்பு தகவல்

தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் அரசியல் மாநாட்டை அக்டோபர் -27 ல் நடத்தவுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அருகில்…

அக்டோபர் 21, 2024 5:46 மணி

விமல், யோகி பாபு கூட்டணியின் புதிய படத்தின் – படப்பிடிப்பு நிறைவடைந்தது.

விமல் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் விமல் தமிழ்…

அக்டோபர் 21, 2024 3:19 மணி

சிதையும் சீனாவின் பொருளாதாரம் தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்க வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்களையும், பெரும் முதலீடுகளையும் சீனாவில்தான் பெரும் அளவில் வைத்திருந்தனர். சீனாவில் முதலீடு செய்வதும்…

அக்டோபர் 21, 2024 2:23 மணி

வெற்றிகரமான 25வது நாள் ‘மெய்யழகன்’!

கார்த்தி, அரவிந்த்சாமியின் மெய்யழகன் திரைப்படம் 25வது நாளை எட்டியுள்ளது. கார்த்தி நடிப்பில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி வெளியான திரைப்படம்…

அக்டோபர் 21, 2024 12:25 மணி

நாளை தொடங்கும் ‘கூலி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

கூலி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

அக்டோபர் 21, 2024 12:11 மணி