இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்துள்ளார். இந்த படமானது வருகின்ற (அக்டோபர் 10) நாளை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இயக்குனர் டிஜே ஞானவேல் சூர்யா ஓகே சொல்லவில்லை என்றால் என்னால் வேட்டையன் படம் பண்ணியிருக்க முடியாது என்று சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். “சூர்யா சாருக்கு வேட்டையன் படத்தின் கதை தெரியும். மீண்டும் நான் சூர்யா சாருடன் படம் பண்ணலாம் என்று நினைத்தபோதுதான் எனக்கு ரஜினி சாரின் அழைப்பு வந்தது. அவருடன் படம் பண்ண வாய்ப்பு கிடைத்தது.
அப்போது சூர்யா சார், இது ரஜினி சாருக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தார். எனவே ‘நாம் எப்போது வேண்டுமானாலும் படம் பண்ணலாம் இது உங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. போய் பண்ணுங்க’ என்று சொன்னார். அவர் என்னை அனுமதிக்கவில்லை என்றால் வேட்டையன் படம் பண்ணி இருக்க முடியாது. ஏனென்றால் நான் ஏற்கனவே சூர்யா சாருக்காக ஸ்கிரிப்டை தயார் செய்து விட்டேன். ப்ரீ ப்ரொடக்சன் பணிகளும் தொடங்கிவிட்டது” என்று தெரிவித்துள்ளார் டிஜே ஞானவேல்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…