மத்திய சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தின் லுயோயாங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அக்டோபர் 10ம் தேதி குழந்தைகளின் அழுகை சத்தம் பக்கத்து வீட்டுகார்களுக்கு கேட்டு உள்ளது.
ஒரு பெண் குடியிருப்பு கட்டிடத்தின் 23வது மாடியிலிருந்த வெளிப்புற ஏசி யூனிட்டில் தனது 2 குழந்தைகளை (ஆண் 1, பெண் 1) அமர வைத்து கணவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பார்த்துள்ளனர். அதனை அவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
மேலும் இரண்டு குழந்தைகளும் பாதுகாப்பு கவசங்கள் எதுவும் இல்லாமல் இருந்ததாகவும், குழந்தைகளின் தாய் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துகொண்டு, கணவன் குழந்தைகளை நெருங்க விடாமல் தடுத்துள்ளார். மேலும் கணவன் – மனைவி இடையே சண்டைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என அருகில் வசிக்கும் வீட்டுகாரர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அதன் பின்னர் தீயணைக்கும் வாகனம் வந்து குழந்தைகளை மீட்டதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது. சமீபத்திய ஒப்பந்தம்…
தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் அரசியல் மாநாட்டை அக்டோபர் -27 ல் நடத்தவுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அருகில்…
விமல் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் விமல் தமிழ்…
சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்களையும், பெரும் முதலீடுகளையும் சீனாவில்தான் பெரும் அளவில் வைத்திருந்தனர். சீனாவில் முதலீடு செய்வதும்…
கார்த்தி, அரவிந்த்சாமியின் மெய்யழகன் திரைப்படம் 25வது நாளை எட்டியுள்ளது. கார்த்தி நடிப்பில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி வெளியான திரைப்படம்…
கூலி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…