இந்தியா

செயலியில் ஐபிஎல் ஒளிபரப்பு – நடிகை தமன்னாவுக்கு சம்மன்

செயலியில் ஐபிஎல் ஒளிபரப்பு – நடிகை தமன்னாவுக்கு சம்மன்
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்ததாக பதியப்பட்ட வழக்கில் நடிகை தமன்னா நேரில் ஆஜராக மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சமீபத்தில் தனது படத்தில் ஒரு பாட்டுற்காவது ஆட வேண்டும் என தேடப்படும் நடிகைகளில் படங்களில் நடித்து தென்னந்திய சினிமாவில் பிரபலமான தமன்னா பாலிவுட் படங்களிலும் பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

அந்த வகையில் மெகா மோசடியில் சிக்கிய மகாதேவ் செயலி தொடர்புடைய மற்றொரு செயலியான ஃபேர் பிளே (fair play ) என்ற செயலி விளம்பரத்தில் பல பாலிவுட் பிரபலங்கள் நடித்துள்ளனர்.

அனுமதியின்றி ஐபிஎல் போட்டிகளை சட்டவிரோதமாக அந்த செயலி நேரலை ஒளிபரப்பு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சட்டவிரோதமாக நேரலை செய்ததால் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் பெற்ற தனியார் நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி கொடுத்த புகாரின் அடிப்படையில் மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த செயலில் விளம்பரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை ஜாக்லின் பெர்னாண்டஸ், பாடகர் பாட்ஷா ஆகியோரை தொடர்ந்து நடிகை தமன்னாவும் நடித்திருந்தார்.

ஃபேர் பிளே செயலியானது மகாதேவ் செயலியுடன் தொடர்புடைய நிறுவனம் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மகாதேவ் செயலி மட்டுமல்லாது தொடர்புடைய 8 செயலிகள் சட்டவிரோதமாக செயல்படுவதாகவும் சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரா மகாராஷ்டிரா ஆகிய காவல்துறையில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த செயலிகள் தொடர்பாக அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

மும்பை தாதா தாவூத் இப்ராஹீம் மற்றும் பல அரசியல் பிரமுகர்களின் பணம் இந்த ஆப்பின் மூலம் சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாகவும் விசாரணை விஸ்வரூபம் எடுத்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் பாலிவுட் பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் சஞ்சய் தத் மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் அந்த நாளில் தான் இந்தியாவில் இல்லை என்றும் அதற்கு பதிலாக தனது பதிலை பதிவு செய்ய மற்றொரு தேதியை ஒதுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

https://www.mugavari.in/news/india-news/mp-election/2010

இந்த நிலையில் நடிகை தமன்னா வரும் 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி மகாராஷ்டிர சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த செயலியின் சட்ட விரோத பணப்பரிமாற்ற விவகாரத்தில் தொடர்புடைய நடிகர் நடிகைகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதா என்ற அடிப்படையிலும் வேறு ஏதேனும் தொடர்பு உள்ளதா எனவும் விரிவான விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Newsdesk

Recent Posts

த.வெ.க கட்சி கொடி தொடர்பாக புதிய சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…

ஆகஸ்ட் 22, 2024 5:04 மணி

கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்

கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…

ஆகஸ்ட் 17, 2024 4:52 மணி

ராஜீவ்காந்தி மருத்துவமனை- மருத்துவ மாணவர்கள் ,கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…

ஆகஸ்ட் 16, 2024 5:24 மணி

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ஆகஸ்ட் 9, 2024 4:02 மணி

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிட பிரான்ஸ் சென்றார் – உதயநிதி ஸ்டாலின்

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…

ஆகஸ்ட் 8, 2024 5:39 மணி

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…

ஆகஸ்ட் 7, 2024 5:47 மணி