இந்தியா

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை – மீட்புப் பணி தீவிரம்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை – மீட்புப் பணி தீவிரம்

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் லசயான் கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கும் பணி 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

குழந்தை உயிருடன் மீட்கப்பட கிராமத்தில் உள்ள கோவில்களில் மக்கள் சிறப்பு பிரார்த்தனை.

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் லசயான் கிராமத்தில் நேற்று மாலை 6 மணி அளவில் சாத்விக் என்ற 2 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்தது.

சாத்விக் அவரது தந்தை சதீஷ் நேற்று முன்தினம் தனது ஆறு ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்வதற்காக ஆழ்துளை கிணறை தோண்ட ஆரம்பித்தார். நேற்று முன்தினம் சுமார் 30 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு தோண்டப்பட்ட நிலையில் அதை மூடாமல் அவர்கள் அப்படியே விட்டு விட்டனர். நேற்று மாலை அதே ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்து சிக்கிக் கொண்டுள்ளது.

உடனடியாக தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தைக்கு முதலில் தேவையான ஆக்சிஜனை வழங்கினர். குழந்தை சுமார் 15 முதல் 20 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஐந்து அடிக்கும் மேல் கடுமையான பாறைகள் இருப்பதால் நேராக குழந்தையை மீட்க செல்லாமல் பக்கவாட்டில் தோன்றி குழந்தையை நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

https://www.mugavari.in/stalin-on-pm-modi/

இந்த பணி பன்னிரண்டு மணி நேரத்தை தாண்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குழந்தை உயிருடன் மீட்கப்பட கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து கோவில்களிலும் பொதுமக்கள் சிறப்பு பூஜையில் ஈடுபட்டு பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Newsdesk

Recent Posts

த.வெ.க கட்சி கொடி தொடர்பாக புதிய சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…

ஆகஸ்ட் 22, 2024 5:04 மணி

கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்

கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…

ஆகஸ்ட் 17, 2024 4:52 மணி

ராஜீவ்காந்தி மருத்துவமனை- மருத்துவ மாணவர்கள் ,கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…

ஆகஸ்ட் 16, 2024 5:24 மணி

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ஆகஸ்ட் 9, 2024 4:02 மணி

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிட பிரான்ஸ் சென்றார் – உதயநிதி ஸ்டாலின்

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…

ஆகஸ்ட் 8, 2024 5:39 மணி

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…

ஆகஸ்ட் 7, 2024 5:47 மணி