Categories: இந்தியா

ராம்தேவ் மன்னிப்பை ஏற்க முடியாது – உச்ச நீதிமன்றம்

ராம்தேவ் மன்னிப்பை ஏற்க முடியாது – உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்- உங்கள் மன்னிப்பை ஏற்க முடியாது.

உரிய அறிவியல் பூர்வ ஆதாரங்கள் இல்லாமல் பதஞ்சலி நிறுவனத்தின் மருந்துகள் பல்வேறு நோய்களை குணப்படுத்துவதாக விளம்பரப்படுத்தியதற்கு எதிராகவும், ஆலோபதி கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டதிற்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதஞ்சலி நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 2023 நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையின் போது தவறாக மக்களை திசை திருப்பும் விளம்பரங்களை ஒளிபரப்பினால் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து வந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பொருட்படுத்தாமல் பதஞ்சலி நிறுவனம் தொடர்ந்து விளம்பரத்தை ஒளிபரப்பி வந்தது.

இதனையடுத்து பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆச்சாரியா பாலகிருஷ்ண ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது. நோட்டீஸ் மீதும் பதில் அளிக்காத நிலையில் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்வழக்கில் இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ் நேரில் ஆஜராகினார். வழக்கு விசாரணை நீதிபதி ஹிமா கோலி அமர்வில் நடைபெற்ற போது, பதஞ்சலி நிறுவனம் தரப்பில் அஜரான வழக்கறிஞர் பதஞ்சலி நிறுவனத்தின் ஊடகப்பிரிவு செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளம்பரப்படுத்தியதாகவும் அதற்காக மன்னிப்பும் கோரியுள்ளதாக பதஞ்சலி நிறுவனம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

https://www.mugavari.in/march-month-metro-passengers/

அதற்கு நீதிபதிகள் பதஞ்சலி நிறுவனத்தின் ஊடகப்பிரிவு நிறுவனத்தின் கீழ் இல்லாமல் தனியாக இயங்குகிறதா? என கேள்வி எழுப்பினர். அதே நேரத்தில் பதஞ்சலி நிறுவனத்தின் மன்னிப்பை ஏற்க முடியாது என திட்டவட்டமாக கூறிய நீதிபதிகள், எதன் அடிப்படையில் பதஞ்சலி நிறுவன மருந்து மற்றும் மருந்துகளுக்கு மாற்று என கூறுகிறீர்கள்? எனவும், அதற்கான அறிவியல் பூர்வ நிறுவனம் உள்ளதா? என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்தில் ஏதேனும் கோரிக்கை வைத்தீர்களா? என்றும் கேள்வி எழுப்பினர்.

அதே நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள போது இந்த விவகாரத்தில் எப்படி செய்தியாளர் சந்திப்பை பதஞ்சலி நிறுவனம் நடத்தியது எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தங்களுக்கு மன்னிப்பு தேவையில்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகளை மீறும் வகையில் செய்தியாளர் சந்திப்பை மீறி கருத்துக்களை தெரிவித்து இருப்பது சட்ட விரோதம் என கூறிய நீதிபதிகள் தாங்கள் யாருக்கும் பாடம் புகழ்த்துவதற்காக நீதிமன்றத்தில் அமரவில்லை என கூறினர்.

இதனை எடுத்து வழக்கை ஏப்ரல் 10ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் எதிர்மனுதாரர்கள் அன்றைய தினம் நேரில் ஆஜராக வேண்டும் என கூறி வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.

Newsdesk

Recent Posts

த.வெ.க கட்சி கொடி தொடர்பாக புதிய சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…

ஆகஸ்ட் 22, 2024 5:04 மணி

கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்

கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…

ஆகஸ்ட் 17, 2024 4:52 மணி

ராஜீவ்காந்தி மருத்துவமனை- மருத்துவ மாணவர்கள் ,கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…

ஆகஸ்ட் 16, 2024 5:24 மணி

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ஆகஸ்ட் 9, 2024 4:02 மணி

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிட பிரான்ஸ் சென்றார் – உதயநிதி ஸ்டாலின்

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…

ஆகஸ்ட் 8, 2024 5:39 மணி

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…

ஆகஸ்ட் 7, 2024 5:47 மணி