நடப்பாண்டியில் கோடை வெயில் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
‘ஜூலை 13- ல் குரூப் 1 தேர்வு நடைபெறும்’ என அறிவிப்பு!
நடப்பாண்டில் வழக்கத்தை விட அதிகமான கோடை வெப்பத்திற்கு தயாராகுங்கள் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி, இந்தாண்டு மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் நாடு முழுவதும் வெப்ப அலைகளுடன் இயல்பை விட அதிகமான வெப்ப நிலை நிலவும் என தெரிவித்துள்ளது.
கோடை வெப்பத்தை சமாளிக்கும் அறிவுறுத்தல்களை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மதியம் 12.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், பருத்தி ஆடைகளை அணிதல், வெயிலில் வெளியே செல்லும் போது பாதுகாப்பு கண்ணாடிகள் அல்லது தொப்பி, காலணிகளை பயன்படுத்த வேண்டும், மதுபானம், காப்பி, தேநீர் மற்றும் குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும், புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும், பழைய உணவுகளை சாப்பிட வேண்டாம், நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகளையோ, செல்லப் பிராணிகளையோ அனுமதிக்கக் கூடாது, உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்?
இதுதவிர அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள வசதிகள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும், கோடைக்காலத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஓஆர்எஸ் கரைசல், குடிநீர் போன்றவற்றை வைத்திருக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…
கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…
கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…
ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…
ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…