தெலங்கானா ஆளுநர் பதவி மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் திடீரென ராஜினாமா செய்தார்.
தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆளுநர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அனுப்பியுள்ளார்.
வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஏதுவாக, டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை அல்லது புதுச்சேரியில் பா.ஜ.க. சார்பில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பங்குச்சந்தையில் மீண்டும் அதிகரிக்கும் முதலீடுகள்!
கடந்த 2019- ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன் தோல்வி அடைந்தார்.
தமிழிசை சௌந்தரராஜன் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
கடந்த 2019- ஆம் ஆண்டு செப்டம்பர் 01- ஆம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன். அதைத் தொடர்ந்து, 2021- ஆம் ஆண்டு பிப்ரவரி 16- ஆம் தேதி புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பும் தமிழிசைக்கு வழங்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…
கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…
கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…
ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…
ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…