அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் திகார் சிறைக்கு அனுப்பப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத் மைதானத்தில் சிக்ஸர்கள் பறந்த ஐ.பி.எல். போட்டி!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21- ஆம் தேதி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை ஒருவாரம் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (மார்ச் 28) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருக்கிறார்.
அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டால் திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயந்த் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோர் திகார் சிறையில் தனித்தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 1,403 பேர் வேட்பு மனுத்தாக்கல்!
காவலில் இருந்தபடி முதலமைச்சர் பணியைத் தொடங்கும் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டால் பதவியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…