குமரியில் மாமியாரின் கொடுமையினால் திருமணம் ஆகி ஆறே மாதத்தில் பெண் தற்கொலை செய்துகொண்டாா் . இந்நிலையில் போலீசாரின் கைது நடவடிக்கையால் பயந்த மாமியார் செண்பகவல்லி விஷம் குடித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெற்குமண் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து வந்தாா். இவருக்கும் கோவை மாவட்டத்தில் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பாபுவின் மகள் சுருதி பாபுவுக்கும் 6 மாதங்களுக்கு முன் திருமணமானது . சுருதி பாபு தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார். அப்போது சுருதியின் மாமியாா் கணவன் அருகே அமர்ந்து சாப்பிடக்கூடாது ,கணவனின் எச்சில் தட்டில் தான் சாப்பிட வேண்டும் என்றெல்லாம் கொடுமை செய்தநிலையில் மனதளவில் உடைந்த சுருதி தற்கொலை செய்துகொண்டாா். இறப்பதற்கு முன் தனது தாய்க்கு என் சாவிற்கு மாமியாா் தான் காரணம் என்று ஆடியோ ஒன்றை அனுப்பினாா் . இதைதொடா்ந்து சுருதியின் பெற்றோர் போலீசில் புகாரலித்தனா் . ஆடியோவை அதாரமாக வைத்து போலீஸ் சுருதியின் கணவர் கார்த்திக், மாமியார் செண்பகவல்லி மற்றும் சுருதி பாபுவின் உறவினர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனா். இந்நிலையில் போலீசின் கைது நடவடிக்கைக்கு பயந்து அவரது மாமியார் செண்பகவல்லி விஷம் குடித்தாா் . மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி பலியானாா் .
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…