இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 22 வயது அபிஷேக். இவர் ஏற்கனவே 2 முறை நீட் தேர்வில் தோல்வியடைந்து . இந்தாண்டு 3வது முறையாக தேர்வெழுதி 60 மதிப்பெண் மட்டுமே எடுத்துள்ளாா். மருத்துவ கல்லூரியில் சேர்வதற்காக தனது நீட் தேர்வின் மதிப்பெண் பட்டியலை எடிட் செய்து தனது குடும்பத்தினரை ஏமாற்றி மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சேர வந்த போது சிக்கினார்.
இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பிறந்த ஹரியானா மாநிலத்தில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவன் அபிஷேக், இரண்டு முறை நீட் தேர்வெழுதி தோல்வி அடைந்துள்ளாா் .இவர் இந்த வருடம் மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதியுள்ளாா் ஆனால் இம்முறையும் 720 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்தநிலையில் மதிப்பெண் பட்டியலை எடிட் செய்து மருத்துவக் கல்லூரியில் சேரும் நோக்கத்தில், அவரது குடும்பத்தினர்களை ஏமாற்றியதோடு மட்டும் அல்லாமல் . தனது தந்தையுடன் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு ராமநாதபுரம் வந்துள்ளார்.
குறிப்பு : மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது
இதைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், அபிஷேக்கின் சான்றிதழ்களை சரிபார்த்துள்ளனர். அப்போது நீட் மதிப்பெண் பட்டியல் போலி என்பது தெரியவந்துள்ளது . இதையடுத்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவர் அபிஷேக், மற்றும் அவரது தந்தை விரேந்திர சிங் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனா்.