வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக – அடையாறு கால்வாயை ஆய்வு செய்த அதிகாரிகள்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் உத்தரவின் படி அடையாறு கால்வாயை ககன் தீப் சிங் பேடி ஆய்வு செய்துள்ளார். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அடையாறு கால்வாயை வருவாய் மற்றும் இணைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் பொன்னையா உள்ளிட்டோர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் செல்லும் கால்வாய் மற்றும் அடையாறு கால்வாய்களை கூடுதல் தலைமைச் செயலாளர் ககந்தீப் சிங் பேடி மற்றும் ஊராகத் வளர்ச்சித்துறை செயலாளர் பொன்னையா ஆய்வு செய்துள்ளனர்.அப்போது அங்கிருந்த நீர்வளத்துறை அதிகாரிகளுடன் கால்வாய் குறித்து கேட்டரிந்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ளது.வடகிழக்கு பருவமழையை ஒட்டி முதலமைச்சர் உத்தரவின் படி அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து பணிகளை தொடங்கியுள்ளனர் எனவும் திருமுடிவாக்கத்தில் அடையாறு செல்லும் பாதையில் கால்வாய் வடிகால் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும் முழுமை அடைந்த கால்வாய் வடிகால் பணிகளை ஆய்வு செய்ய நேரில் வந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக – அடையாறு கால்வாயை ஆய்வு செய்த அதிகாரிகள்.செம்பரம்பாக்கத்தில் இருந்து திறக்கப்படும் நீர் அடையாறில் நிரம்பி வெளியேறும் பகுதியில் இந்த வடிகால் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் முடிவடைந்த வடிகால் பயனளிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Video thumbnail
அவளை எதுவும் தடுக்கவில்லை... அவள் சொன்ன முதல் வார்த்தையே... 'அப்பா'தான்! | appa | love | kavithai |
07:16
Video thumbnail
கடற்கரை சுத்தம் செய்யும் பணியில் ரெஜினா.... | cleaning | marina | sup club | regina |
00:37
Video thumbnail
ஜூன்-4 பின்னர் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைமை என்ன ஆகும்? | ADMK | Again Sasikala | BJP | Congress |
06:22
Video thumbnail
ஆவடி அருகே இரட்டை கொலை - காரணம் என்ன? Double murder near Avadi - what is the reason? | avadi |
03:11
Video thumbnail
2026 அதிமுகவின் வியூகம் மாறுமா? திமுக செய்ய வேண்டியது என்ன? | dmk | admk | strategy | Part - 2
14:01
Video thumbnail
உள்ளாட்சி நிர்வாகத்தில் குளறுபடி..திமுக திருத்தி கொள்ள வேண்டும்.. DMK needs to be corrected |admk|
13:01
Video thumbnail
சாதிவாரி கணக்கெடுப்பு... ராகுல் காந்தி உறுதி.. வடமாநிலங்களில் விவாதமாக மாறியது... | bjp | congress |
07:53
Video thumbnail
நம்பிக்கை இழந்த மோடி..மோடியின் இன வெறி பேச்சால் ராகுல் பிரதமராக வாய்ப்பு..| bjp | congress | korea |
06:44
Video thumbnail
பாஜக 150 -க்கு மேல் தாண்டாது... வட மாநில ராஜபுத்திர மக்கள் கொந்தளிப்பு... | bjp | congress | musk |
13:14
Video thumbnail
மாறுகிறது களம்..Elon musk கொடுத்த Shock.அடுத்த பிரதமர் ராகுல் காந்தியை சந்திக்க Elon musk திட்டம்
02:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img