அரசியல்

“ஜாதிவாரி கணக்கெடுப்பு அரசியல் இல்லை; வாழ்க்கை லட்சியம்” – ராகுல்

“ஜாதிவாரி கணக்கெடுப்பு அரசியல் இல்லை; வாழ்க்கை லட்சியம்” – ராகுல்

இந்தியா முழுமைக்குமான ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தனது வாழ்க்கையில் அலட்சியம் என்றும் அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் ராகுல் காந்தி உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற சமூக நீதிக்கான கருத்தரங்கில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் புரட்சிகரமான தேர்தல் அறிக்கையை பார்த்து பிரதமர் மோடி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்தார்.

தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்றும் தீவிரமான அரசியல்வாதி கிடையாது என்றும் பாஜகவினர் விமர்சிப்பதற்கு பதிலளித்த ராகுல் காந்தி பெரும்பான்மையான மக்கள் பிரச்சனைகளுக்காக பேசுவது தீவிர அரசியல் இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.

 

அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், விராட் கோலி உடன் பேசுவது தான் தீவிர அரசியலா என்றும் மோடியை மறைமுகமாக ராகுல் சாடினார்.

70 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கொள்ள போகும் முக்கியமான நடவடிக்கையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு இருக்கப் போகிறது என்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பை அரசியலுக்காக நடத்தவில்லை அதுதான் தனது வாழ்க்கையின் லட்சியம் என்றும் ராகுல் காந்தி கூறினார்.

அனைத்து இடங்களிலும் தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் எனக் கூறிக் கொண்டிருந்த மோடி ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேச தொடங்கியவுடன் ஜாதிகளே இல்லை எனக் கூறிய இரட்டை வேடம் போடுவதாகவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.

பெரும் பணக்காரர்களுக்கு மோடி அளித்த 16 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடியை 90 சதவீத இந்தியர்கள் பயன்பெறும் வகையில் பிரித்து பயன்படுத்துவதே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் லட்சியம் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

https://www.mugavari.in/news/politics/lok-sabha-elections-phase-2-voting-underway/1878

16 லட்சம் கோடியை மக்களுக்காக பயன்படுத்தினால் சமையல் எரிவாயு சிலிண்டரை 400 ரூபாய்க்கு வழங்க முடியும் என்பது உள்ளிட்ட நன்மைகளையும் ராகுல் பட்டியலிட்டு உள்ளார்.

Newsdesk

Recent Posts

த.வெ.க கட்சி கொடி தொடர்பாக புதிய சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…

ஆகஸ்ட் 22, 2024 5:04 மணி

கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்

கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…

ஆகஸ்ட் 17, 2024 4:52 மணி

ராஜீவ்காந்தி மருத்துவமனை- மருத்துவ மாணவர்கள் ,கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…

ஆகஸ்ட் 16, 2024 5:24 மணி

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ஆகஸ்ட் 9, 2024 4:02 மணி

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிட பிரான்ஸ் சென்றார் – உதயநிதி ஸ்டாலின்

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…

ஆகஸ்ட் 8, 2024 5:39 மணி

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…

ஆகஸ்ட் 7, 2024 5:47 மணி