அரசியல்

திகார் சிறையில் டெல்லி முதலமைச்சர்

திகார் சிறையில் டெல்லி முதலமைச்சர்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திகார் சிறை அழைத்து செல்லப்பட்டார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். சிறை சாலைக்கு வெளியே ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட 11 நாள் அமலாக்கத்துறை விசாரணை காவல் நிறைவடைந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து 15 நாட்கள் நீதிமன்ற காவல் இன்று வழங்கப்பட்டது.

https://www.mugavari.in/mk-stalin-critizise-pm-modi/

நீதிபதி நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் உள்ள திகார் சிறையில் அறை எண் 2ல் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரவிந்த் கெஜ்ரிவால் காவல்துறை வாகனத்தில் திகார் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட போது திகார் சிறை வளாகத்திற்கு வெளியே கூடியிருந்த ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள், நாங்களும் கெஜ்ரிவால் தான் என கோஷமிட்டு கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள். அதே நேரத்தில் அமலாக்கத்துறைக்கு எதிராகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.

Newsdesk

Recent Posts

த.வெ.க கட்சி கொடி தொடர்பாக புதிய சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…

ஆகஸ்ட் 22, 2024 5:04 மணி

கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்

கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…

ஆகஸ்ட் 17, 2024 4:52 மணி

ராஜீவ்காந்தி மருத்துவமனை- மருத்துவ மாணவர்கள் ,கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…

ஆகஸ்ட் 16, 2024 5:24 மணி

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ஆகஸ்ட் 9, 2024 4:02 மணி

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிட பிரான்ஸ் சென்றார் – உதயநிதி ஸ்டாலின்

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…

ஆகஸ்ட் 8, 2024 5:39 மணி

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…

ஆகஸ்ட் 7, 2024 5:47 மணி