அரசியல்

கோவையில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டி பேட்டி துரோகத்தின் சிரிப்பு – முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ

எடப்பாடியின் சிரிப்பு துரோகத்தின் சிரிப்பு – முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ

எடப்பாடி பழனிச்சாமியின் சிரிப்பு துரோகத்தின் சிரிப்பு என கோவையில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டி பேட்டி அளித்துள்ளார்.

அதிமுகவில் 50 ஆண்டுகள் காலம் பணியாற்றினேன், 2 முறை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ வாக இருந்தேன்.

கடந்த தேர்தலின் போது எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. வாய்ப்பு கொடுக்கப்பட்ட பி.ஆர்.ஜி.அருண்குமார் தனக்கு பணியாற்றுமாறு கோரினார். நானும் வேலை செய்தேன். ஆனால் கட்சி தலைமையில் இருந்து கண்டுகொள்ளவில்லை ஓரம் கட்டினார்கள்.

பிறகு செந்தில் பாலாஜி அழைத்தார். மரியாதை இல்லாத கட்சியில் இருக்க வேண்டாம் என கூறியதை தொடர்ந்து விளகினேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை இணைந்தேன்.

அதிமுக இயக்கம் உடைந்த போது, ஒ.பி.எஸ். அணியில் இருந்தேன். அப்போது அவர்கள் கூவத்தூரில் இருந்தார்கள். 1986 ல் இருந்து பணியாற்றிய என்னை ஒதுக்கினார்கள். துரோகத்தின் எல்லை எடப்பாடி பழனிச்சாமி தான். இயக்கத்தை அழிக்க வேண்டும் என் கூறினர்.

உதயகுமாரில் இருந்த அனைவரும் சசிகலா காலில் விழுந்து அமைச்சர்களாக வந்தவர்கள் தான். இல்லை என சத்தியம் போட முடியுமா?

வார்டு உறுப்பினர், சேர்மேனாக இருந்து பல்வேறு பணியாற்றியதால் மக்கள் ஆதரவளித்தனர்.

தற்போது பிரச்சாரத்திற்கு செல்லும் போது முதல்வர் திட்டத்தால் மக்களிடம் வரவேற்பு கிடைக்கிறது. ஆனைக்கட்டியில் அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை கிடைப்பதாக கூறினார்கள். ஆனைக்கட்டியில் இருந்து கோவைக்கு பணிக்கு வரும் பெண்கள் பேருந்துக்கு தினமும் 50 ரூபாய் செலவழித்து வந்தனர். இப்போது இலவச பேருந்தால் அந்த பிரச்சனை இல்லை என்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழகத்திலேயே மிகப்பெரிய அரசியல் துரோவி. அவரது சிரிப்பு துரோதத்தின் சிரிப்பு தான். அனைவரும் காலில் விழுந்து பதவி வாங்கி சசிகலாவிற்கே துரோகம் செய்தவர்கள்.

https://www.mugavari.in/news/sports/today-gold-rate-4/1023

நான் அதிமுகவில் நெஞ்சை நிமிர்த்தி பணியாற்றியவன். ஜெயலலிதா அம்மா காலில் கூட விழுகாதவன். நான் கட்சியில் இருந்த போது எந்த துரோகமும் செய்யவில்லை.

அண்ணாமலையை நீக்கினால் தான் கூட்டணி என அதிமுக கூறியது, அதே போல எடப்பாடி நீக்கினால் தான் கூட்டணி என பாஜகவும் கூறலாம் தானே.

Newsdesk

Recent Posts

த.வெ.க கட்சி கொடி தொடர்பாக புதிய சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…

ஆகஸ்ட் 22, 2024 5:04 மணி

கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்

கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…

ஆகஸ்ட் 17, 2024 4:52 மணி

ராஜீவ்காந்தி மருத்துவமனை- மருத்துவ மாணவர்கள் ,கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…

ஆகஸ்ட் 16, 2024 5:24 மணி

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ஆகஸ்ட் 9, 2024 4:02 மணி

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிட பிரான்ஸ் சென்றார் – உதயநிதி ஸ்டாலின்

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…

ஆகஸ்ட் 8, 2024 5:39 மணி

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…

ஆகஸ்ட் 7, 2024 5:47 மணி