Categories: அரசியல்

கச்சத்தீவை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை – எழிலன் நாகநாதன்

கச்சத்தீவை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை – எழிலன் நாகநாதன்

இலங்கையில் அதானியின் துறைமுகத்தை அமைப்பதற்கு மோடி வழி செய்கிறார். ஆனால் கடந்த 10 வருடங்களாக கச்சத்தீவை மீட்பதற்கு எள்ளளவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் தெரிவித்தார்.

ஆயிரம் விளக்கு கிழக்கு பகுதி திமுக சார்பில் 117வது வட்டத்தில் மத்திய சென்னை திமுக வெற்றி வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் இளைய மகன் மு.க.தமிழரசு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சென்னை தி.நகர், சௌத்போக்சாலை, தாமஸ் சாலை, நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு பொதுமக்கள் மலர் தூவியும் ஆரத்தி எடுத்தும் தேங்காய்களை உடைத்து உற்சாக வரவேற்பு தந்தனர்.

https://www.mugavari.in/mivsrr-ipl-match-2/

இந்த வாக்கு சேகரிப்பு பணியில் மருத்துவர் அணி செயலாளர் நா. எழிலன் எம்.எல்.ஏ, பகுதி கழக செயலாளர் மா.பா.அன்புதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் நுங்கை வி.எஸ்.ராஜ், ஆயிரம் விளக்கு தொகுதி பொறுப்பாளர் மருத்துவர் கலை கதிரவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராபர்ட், வட்ட செயலாளர் சத்திய பெருமாள் மற்றும் தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன், மக்கள் எழுச்சி உடன் இருக்கின்றனர். இங்கு இருக்கக்கூடிய அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை சென்றுள்ளதுள்ளது என்றார்.

மக்கள் திராவிட மாடல் ஆட்சிக்கு அங்கீகாரம் தருகிறார்கள். மோடி போன்ற பித்தலாட்ட ஆட்சியாளர்கள் 10 ஆண்டுகளில் நாட்டை சீரழித்து விட்டனர். இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று மக்கள் தெளிவாக உள்ளனர்.

1974ஆம் ஆண்டு கச்சத்தீவு விவகாரம் குறித்து முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கச்சத்தீவு மீட்பை பற்றி பேசி வருகிறோம். இலங்கையில் அதானியின் துறைமுகத்தை அமைப்பதற்கு மோடி வழி செய்கிறார். ஆனால் கடந்த பத்து வருடங்களாக கச்சத்தீவை மீட்பதற்கு எள்ளளவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

2024 திமுக பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் குலசேகரப்பட்டின லான்சிங் பேட் சுற்றி 150 கிலோமீட்டர் கச்சத்தீவு பகுதிகளில் உள்ளது. நாட்டின் பாதுகாப்பு கருதி மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட இந்தியா கூட்டணி அமைந்த உடன் கச்சத்தீவை மீட்டெடுக்க திமுக முழுவீச்சுடன் களமிறங்கும் என்றார்.

Newsdesk

Recent Posts

த.வெ.க கட்சி கொடி தொடர்பாக புதிய சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…

ஆகஸ்ட் 22, 2024 5:04 மணி

கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்

கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…

ஆகஸ்ட் 17, 2024 4:52 மணி

ராஜீவ்காந்தி மருத்துவமனை- மருத்துவ மாணவர்கள் ,கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…

ஆகஸ்ட் 16, 2024 5:24 மணி

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ஆகஸ்ட் 9, 2024 4:02 மணி

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிட பிரான்ஸ் சென்றார் – உதயநிதி ஸ்டாலின்

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…

ஆகஸ்ட் 8, 2024 5:39 மணி

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…

ஆகஸ்ட் 7, 2024 5:47 மணி