தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பார்த்து வயிறு எரிகிறது, இரண்டு நாட்கள் சாப்பிடவில்லை மன உலைச்சல் ஏற்படுகிறது தேனியில் செய்தியாளர் சந்திப்பில் ஆர்.பி.உதயகுமார் புலம்பல்
வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்கான ஆலோசனைகளை வழங்க தேனி வந்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிமுக காரியாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தேனி தொகுதியில் திமுக, பாஜக கூட்டணி வேட்பாளரை விட அதிமுக வேட்பாளர் அனைத்து ஊராட்சிகளுக்கு சென்றும் 9 லட்ச வாக்காளர்களை சந்தித்திருக்கிறார். தற்போது வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு பெயரில் பல்வேறு விவாதங்கள் நடக்கிறது. அதில் கருத்து திணிப்பு நடத்தி எங்கள் தொண்டா்களை சோர்வடைய செய்யும் வேலையை செய்கிறார்கள். ஆனால் எங்களின் வாக்கு முகவர்கள் ராணுவ வீரர்களை போல பயிற்சியளிக்கப்பட்டு சுறுசுறுப்பாக பணியாற்ற இருக்கிறார்கள்.
அதிமுகவுக்கு நிரந்தர வாக்கு வங்கி இருக்கிறது. அவர்கள் மாற்றி வாக்களிக்க மாட்டார்கள். இருப்பினும் ஆளுங்கட்சி ஏதேனும் தில்லுமுல்லு செய்வார்களோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. தமிழகம் புதுச்சேரியில் அதிமுக 40க்கு 25 இடங்களில் வெற்றி பெரும், குறிப்பாக தேனி தொகுதியில் வெல்வோம். எந்த சூழ்ச்சியும் சூதும் எடுபடாது.
வாக்குப்பதிவு செய்துவிட்டு வந்தவர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியதாக கூறுகிறீர்கள். ரகசிய வாக்குப்பதிவு ரகசியமாக இருக்கும் போது அவர்கள் கூறுவதை எப்படி உண்மையென எடுத்துக் கொள்ள முடியும். 16 லட்ச வாக்காளர்கள் உள்ள தொகுதியில் 3 லட்ச வாக்காளர்களிடம் கேட்டிருக்க வேண்டும், ஒரு சிலரிடம் கருத்து கேட்டுவிட்டு முடிவை கணிக்கிறார்கள். ஆன்-லைனில் கருத்துக்கணிப்பை நடத்தினோம் என்கிறார்கள். தொகுதியில் 15 சதவிகித 30 சதவிகித வாக்காளர்களை சந்தித்தால் கூட பரவாயில்லை.
இவ்வாறு கருத்துக்கணிப்பு வெளியிடுவதன் மூலம் பலருக்கும் மனஉளைச்சல் ஏற்படும். வாக்களித்த மக்களுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கட்சியினருக்கும் அச்சத்தை ஏற்படுத்திகிறது. சமூக வலைதளங்களிலும் தவறான கருத்துகளை வெளியிடுகின்றனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாவதை பார்த்து வயிறு எரிகிறது 2 நாள்களாக சாப்பிடவில்லை தூக்கமில்லை . மனஉளைச்சல் ஏற்பட்டிருக்கிறது என்று புலம்பினார்.
ஒடிசாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது அங்கு உள்ள வி.கே.பாண்டியன் மற்றும் தமிழர்கள் ஆடை குறித்து இழிவுபடுத்தும் விதமாக பாஜக பேசியதாக கருத்து நிலவுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் வி.கே. பாண்டியன் மதுரை மேலூரை சேர்ந்தவர் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒடிசாவில் ஐஏஎஸ் அதிகாரியக பணியாற்றினார் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார் அதை பொருத்துக்கொள்ள முடியாமல் பிரச்சாரம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. உலகத் தமிழர்களுக்கு ஒரு தலைகுணிவு ஏற்பட்டாலும் அதை தமிழினம் எதிர்த்து நிற்க வேண்டும் என தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…
கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…
கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…
ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…
ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…