17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறும் 53வது லீக் போட்டியில் பஞ்சாப்vsசென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 52 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 53வது லீக் போட்டி நடைபெறுகிறது. இமாசலபிரதேசத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 53வது லீக் போட்டியில் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பஞ்சாப் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 4 வெற்றி 6 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திலுள்ளது. சென்னை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 5 வெற்றி 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திலுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 29 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 15 முறையும் பஞ்சாப் அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த போட்டியில் சென்னை அணி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து ஏமாற்றமளித்தது. தற்போது அதற்கு பதிலடி கொடுக்குமா என ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் அணியும் தங்களது வெற்றியை தொடர முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.