உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் ஆலையில் அமோனியா வாயு கசிவு
கோவை மாவட்டம் காரமடை அருகே தனியார் ஆலையில் அம்மோனிய வாயு கசிந்ததால் ஏராளமானோர் மூச்சு திணறலுக்கு ஆளாகினர். ஏற்கனவே மூடப்பட்ட இந்த ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கூடாது என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகிறார்கள்.
காரமடை அருகே சிக்காரம் பாளையம் ஊராட்சிகள் செயல்பட்டு வந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை பல்வேறு காரணங்களால் மூடப்பட்டது.
கடந்த பல மாதங்களாக செயல்படாமல் இருந்து வந்த நிலையில் புதிய உரிமையாளர் இந்த ஆலையை வாங்கி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். வழக்கம் போல நடைபெற்ற பராமரிப்பு பணியின் போது நேற்று மாலை எதிர்பாராத விதமாக ஆலையில் அமோனியா கசிவு ஏற்பட்டது.
ஆலையை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து நள்ளிரவில் வெளியேறிய கிராம மக்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆலையில் அம்மோனியா வாயு கசிவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து மீண்டும் தங்கள் வீடுகளுக்கு சென்ற பொதுமக்கள் இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
https://www.mugavari.in/news/cinema-news/pattas-actress-claims-to-have-frozen-eggs/2328
ஆலையில் மீண்டும் வாயு கசிவு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…