சென்னை வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மோப்ப நாய் உதவியுடன் தீவிரமாக சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை கோயம்பேடு அருகே அமைந்துள்ள பிரபலமான வி.ஆர். மாலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் வாயிலாக மிரட்டல் விடப்பட்டுள்ளது. இதனையடுத்து அருகே உள்ள திருமங்கலம் போலீசாருக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்களும், இரண்டு மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு வி.ஆர். மால் முழுவதும் தீவிர சோதனை செய்து வருகிறார்கள். மோப்ப நாய்கள் மூலம் சோதனை நடைபெறுவதை கண்ட பொதுமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறினர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை அண்ணா நகர், திருமங்கலம், அயனாவரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் அமைந்துள்ள பிரபல மாலில் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.
https://www.mugavari.in/news/tamilnadu-news/chennai-109-criminal-arrest/1731
இதுபோன்று தொடர் நிகழ்வு ஏற்படுவதால் சென்னை திருமங்கலம், அயனாவரம், அண்ணா நகர் சுற்றுப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…
கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…
கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…
ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…
ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…