தமிழ்நாடு

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு!

 

சென்னை தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

பாஜகவின் செல்வாக்கு சரிகிறது! அமலாக்கத்துறைக்கு நன்றி சொல்லும் இண்டியா கூட்டணி!

சென்னை ஆழ்வார்பேட்டை செயின் மேரிஸ் சாலையில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியில் ஏராளமானோர் இருந்தனர். அப்போது முதல் தளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் 3 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நிலையில், தீயணைப்பு வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் விரைந்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள் விடுதியின் ஊழியர்களான மணிப்பூரைச் சேர்ந்த லல்லி என்ற திருநங்கை, மேக்ஸ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ராஜ் என்பது தெரிய வந்துள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சென்னை மாநகர கூடுதல் ஆணையர், கிழக்கு காவல் இணை ஆணையர் ஆகியோர் விபத்து பகுதியில் ஆய்வு செய்தனர். மெட்ரோ பணிகளால் விபத்து நடந்திருக்கலாமா என செய்திகள் வெளியான நிலையில், விபத்து நடந்த பகுதியில் மெட்ரோ அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.

“இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை ஜெயலலிதா”- எடப்பாடி பழனிசாமி பேச்சு!

அதைத் தொடர்ந்து, மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், கேளிக்கை விடுதி அமைந்துள்ள பகுதியில் இருந்து 340 அடிகள் தொலைவில் பணிகள் நடைபெற்றதாகவும், விபத்திற்கு மெட்ரோ பணிகள் காரணம் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

santhosh

Recent Posts

த.வெ.க கட்சி கொடி தொடர்பாக புதிய சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…

ஆகஸ்ட் 22, 2024 5:04 மணி

கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்

கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…

ஆகஸ்ட் 17, 2024 4:52 மணி

ராஜீவ்காந்தி மருத்துவமனை- மருத்துவ மாணவர்கள் ,கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…

ஆகஸ்ட் 16, 2024 5:24 மணி

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ஆகஸ்ட் 9, 2024 4:02 மணி

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிட பிரான்ஸ் சென்றார் – உதயநிதி ஸ்டாலின்

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…

ஆகஸ்ட் 8, 2024 5:39 மணி

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…

ஆகஸ்ட் 7, 2024 5:47 மணி