மதிமுக தோழர்கள் நீர், மோர் பந்தல்கள் அமைக்க முன் வர வேண்டும் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வரலாறு காணாத வெயில் வாட்டுகிறது. இக்கோடை வெயிலில் தவிக்கும் மக்களின் தாகம் தணிக்க உதவிடும் வகையில் மறுமலர்ச்சி தி.மு.க. தோழர்கள் நீர் மோர் பந்தல்களை அமைத்திட முன்வருமாறு அன்புடன் வேண்டுகிறேன். 2024 நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தமிழ்நாடு தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளவாறு, நீர் மோர் பந்தல் அமைப்பதற்கு தொடர்புடைய மாவட்டங்களில் உள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சியர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் முறையாக விண்ணப்பித்து முன் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு முன் அனுமதி பெற்று, மக்களின் தாகம் தீர்க்கும் நீர், மோர், குளிர்பானம் வழங்கும் இக்கடமையினை வாய்ப்புள்ள இடங்களில் சிறப்பாகச் செய்திட வேண்டுமென மறுமலர்ச்சி தி.மு.க. சார்பிலும், கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சார்பிலும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…