மக்களவை தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனை தொடர்ந்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துகிறது. இதற்காக கடந்த 16ம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்தது. அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்து கட்ட தேர்தலும் முடிவடைந்த பின்னர் ஜூன் 04ம் தேதி வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலில் வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிலையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் வழக்கத்தைவிட 30%க்கு மேல் மதுபானங்கள் விற்பனையாகும் கடைகளில், தேர்தல் அதிகாரிகள் உத்தரவின் பேரில் டாஸ்மாக் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…
கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…
கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…
ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…
ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…