வறட்சியான நேரத்தில் ஓய்வு எடுப்பதற்கு முதலமைச்சர் செல்வதா? – ஈபிஎஸ் கேள்வி

வறட்சியான நேரத்தில் ஓய்வு எடுப்பதற்கு முதலமைச்சர் செல்வதா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்காடு பேருந்து விபத்தில் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த பின் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். இதில் பேசிய அவர் , தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளன; புதிய பேருந்துகள் வாங்குவதாக திமுக ஆட்சியில் பொய் கூறுகின்றனர்; சென்னையில் மின்சார பேருந்துகளுக்கு அதிமுக ஆட்சியில் ஜெர்மனியுடன் ஒப்பந்தம் போடப்பட்டது; அதிமுக ஆட்சியில்தான் 14,000 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன. அரசு பேருந்துகளில் பயணிகள் மிகுந்த அச்சத்துடனே பயணித்து வருகின்றனர். ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் தமிழ்நாடு அரசு நிவாரணமாக வழங்க வேண்டும்.

சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாகனங்களை அதிகாரிகள் முறையாகக் கண்காணிக்க வேண்டும். நான் ரகசிய பயணம் எதுவும் நான் மேற்கொள்ளவில்லை. அதிக நேரம் நிற்பதால் குதிகாலில் வலி ஏற்பட்டது. ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா சென்றிருந்தேன். வறட்சியான நேரத்தில் ஓய்வு எடுப்பதற்கு முதலமைச்சர் செல்வதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Raj

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி