விருதுநகர் கல் குவாரி விபத்து தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஈபிஎஸ் வலியுறுத்தல்!

விருதுநகர் கல் குவாரி விபத்து தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என அதிமுகப் பொதுச்செயாலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி ஆவியூரில் கல் குவாரி குடோன் வெடித்து சிதறி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றாமல் வெடி பொருட்களை நகர்த்தியதே விபத்திற்கு காரணம் என செய்திகள் வருகின்றன. கடந்த சில வருடங்களில் மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெடிவிபத்துகளில் 93 பேர் உயிரிழந்ததாக சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

தொடர்ச்சியான விபத்துகள் நடந்தும் இந்த விடியா திமுக அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இதுபோன்ற தொடர் விபத்துகளும் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்புகளும். வெடிபொருள் விபத்துகளை தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத பொம்மை முதல்வர் திரு. @mkstalin அவர்கள் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவும், இவ்விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறிழைத்தோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Raj

Recent Posts

‘மரகத நாணயம் 2’ படத்தில் இணையும் நடிகர் சத்யராஜ்!

மரகத நாணயம் 2 திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் இணைவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏ ஆர்…

அக்டோபர் 23, 2024 5:32 மணி

அஜித்தின் மிகப்பெரிய ரசிகன் நான் அவரைப் போல யாரும் இருக்க முடியாது – துல்கர் சல்மான் பேச்சு!

  நடிகர் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன் தாம் என்றும் அவரைப் போல யாரும் இருக்க முடியாது என்றும் நடிகர் துல்கர்…

அக்டோபர் 23, 2024 4:47 மணி

பல திருமணங்களை பதிவு செய்ய இஸ்லாமிய ஆண்களுக்கு உரிமை உண்டு: மும்பை உயர் நீதிமன்றம்.

முஸ்லிம் இளைஞர் ஒருவர் அல்ஜீரிய பெண்ணை 3வது திருமணம் செய்த சான்றிதழை தானே குடிமை அமைப்பு நிராகரித்துள்ளது. இது தொடர்பான…

அக்டோபர் 23, 2024 4:17 மணி

ஆயுள் கைதியை சித்ரவதை செய்த விவகாரம்… வேலூர் சரக டிஐஜி உள்பட 3 பேர் சஸ்பெண்ட்

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்ட 3 பேர் பணியிடை…

அக்டோபர் 23, 2024 3:40 மணி

மாதவன் படத்தில் நடிக்க மறுத்த பூமிகா சாவ்லா என்ன படம் தெரியுமா?

நடிகை பூமிகா சாவ்லா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்து பெயர் பெற்றுள்ளார். இவர்…

அக்டோபர் 23, 2024 2:53 மணி

திருமணமான ஆறே மாதத்தில் பெண் தற்கொலை – ஆடியோ பதிவில் கூறியது என்ன ?

குமரியில் கணவன் அருகே அமரக்கூடாது என மாமியார் கொடுமை செய்வதாக கூறி திருமணமான 6 மாதங்களில் பெண் தற்கொலை செய்துள்ளார்.…

அக்டோபர் 23, 2024 2:34 மணி