பத்திரிகைத் துறை நண்பர்கள் அனைவருக்கும் உலக பத்திரிக்கை சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், உள்ளதை உள்ளபடி மக்களுக்கு எடுத்துக் கூறும் மக்களாட்சியின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையின் அடிப்படை உரிமைகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் பத்திரிக்கை சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள் என்று அனைத்து பத்திரிக்கைத் துறை நண்பர்களையும் கேட்டு கொண்டு , உலக பத்திரிக்கை சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.