தமிழ்நாடு

ஆவடி மாநகராட்சி விரிவாக்கம்; அதிகாரப் பூர்வ அறிவிப்பு.

ஆவடி மாநகராட்சியுடன் 3 நகராட்சி 19 ஊராட்சிகளை இணைப்பதாக அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிராம ஊராட்சிகளின் பதவிக்காலம் முடிந்தவுடன் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்க முடிவு செய்துள்ளதாக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆவடி மாநகராட்சிக்கு அருகில் உள்ள கிராம உள்ளாட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கும் பணியை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன்படி கிராம ஊராட்சிகளை நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைப்பது தொடர்பாக இறுதி அறிக்கையை தமிழ்நாடு அரசு தயாரித்துள்ளது.

அந்த அறிக்கையில் ஆவடி மாநகராட்சியுடன் 3 நகராட்சிகள் மற்றும் 19 கிராம ஊராட்சிகளை இணைக்கப்பட உள்ளது. அதன்படி திருவேற்காடு நகராட்சி, திருநின்றவூர் நகராட்சி மற்றும் பூவிருந்தவல்லி நகராட்சி ஆகிய 3 நகராட்சிகளை ஆவடி மாநகராட்சியுடன் இணைந்துள்ளனர்.

நெமிலிச்சேரி
நடுக்குத்தகை, காட்டுப் பாக்கம், சென்னீர்குப்பம் , வரதராஜபுரம், நசரத்பேட்டை, அகரம் மேல், பனவீட்டு தோட்டம், பரிவாக்கம், கண்ணப்பாளையம், சோராஞ்சேரி, கருணகரச்சேரி, மோரை, வெள்ளனூர், பாலவேடு, மேப்பூர், ஐயப்பாக்கம், அடையாளம் பட்டு, வானகரம் ஆகிய 19 ஊராட்சிகளை இணைத்து முதற்கட்ட அறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு நகராட்சிகளுடன் 13 பேரூராட்சிகள் மற்றும் 196 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளது.

 

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட நகராட்சிகளுடன் 24 பேரூராட்சிகள், 24 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 மாநகராட்சிகளுடன் 2 பேரூராட்சிகள் மற்றும் 46 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளது.

இதன்படி சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளின் பதவிக்காலம் முடிந்தவுடன் அந்த கிராம ஊராட்சிகள் அனைத்தும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Newsdesk

Recent Posts

பகையாளியை பங்காளியாக்கிய இந்தியா- முதன் முறையாக முன் வந்த சீனா..!

கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது. சமீபத்திய ஒப்பந்தம்…

அக்டோபர் 22, 2024 4:18 மணி

ஆலோசகர் இல்லாமல் தடுமாறும் தலைவா் விஜய் – தவெக முதல் அரசியல் மாநாடு பரபரப்பு தகவல்

தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் அரசியல் மாநாட்டை அக்டோபர் -27 ல் நடத்தவுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அருகில்…

அக்டோபர் 21, 2024 5:46 மணி

விமல், யோகி பாபு கூட்டணியின் புதிய படத்தின் – படப்பிடிப்பு நிறைவடைந்தது.

விமல் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் விமல் தமிழ்…

அக்டோபர் 21, 2024 3:19 மணி

சிதையும் சீனாவின் பொருளாதாரம் தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்க வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்களையும், பெரும் முதலீடுகளையும் சீனாவில்தான் பெரும் அளவில் வைத்திருந்தனர். சீனாவில் முதலீடு செய்வதும்…

அக்டோபர் 21, 2024 2:23 மணி

வெற்றிகரமான 25வது நாள் ‘மெய்யழகன்’!

கார்த்தி, அரவிந்த்சாமியின் மெய்யழகன் திரைப்படம் 25வது நாளை எட்டியுள்ளது. கார்த்தி நடிப்பில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி வெளியான திரைப்படம்…

அக்டோபர் 21, 2024 12:25 மணி

நாளை தொடங்கும் ‘கூலி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

கூலி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

அக்டோபர் 21, 2024 12:11 மணி