பட்டாபிராம் தண்டுரை வயல் பகுதியில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்சார கம்பியில் உரசியதில் திடீரென லாரியில் இருந்து கரும்புகை கிளம்பியது.
இதனை பார்த்த டிரைவர் உடனே லாரியை சாலையிலேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கி ஓடினார்.சிறிது நேரத்தில் கரும்புகை தீயாக மாறி லாரி முழுவதும் மளமளவென பயங்கரமாக கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. தீ வேகமாக பரவி வானுயர கரும்புகை சூழ்ந்தது.
இதை பார்த்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் உடனடியாக ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனத்தில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் லாரி மற்றும் வைக்கோல் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனா்.
ஆனாலும் வைக்கோல் முழுமையாக எரிந்து லாரி எலும்புக்கூடு போல் காட்சியளித்தது. இது குறித்து பட்டாபிராம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…