ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது எனக் கூறி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
வேட்பு மனுத்தாக்கல் நிறைவு: 834 பேர் வேட்பு மனுத்தாக்கல்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (மார்ச் 27) மாலை மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ம.தி.மு.க. ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் பொதுச்சின்னம் பட்டியலில் பம்பரத்தை ஒதுக்க முடியாது” என்று வாதிட, ம.தி.மு.க. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக வாதிட்டார்.
பானைச் சின்னம் கேட்டு வி.சி.க. வழக்கு!
இதற்கு விளக்கம் அளித்த இந்திய தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், “ஒரே மாநிலத்திற்குள் ஒன்றுக்கும் அதிகமான தொகுதியில் போட்டியிட்டால் தான் பம்பரம் சின்னம் ஒதுக்க முடியும்” என்றனர்.
தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் வழக்கில் தீர்வு காண இயலாது எனக் குறிப்பிட்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…