தமிழ்நாடு

ம.தி.மு.க.வுக்கு அதிர்ச்சிக் கொடுத்த உயர்நீதிமன்றம்!

 

ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது எனக் கூறி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

வேட்பு மனுத்தாக்கல் நிறைவு: 834 பேர் வேட்பு மனுத்தாக்கல்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (மார்ச் 27) மாலை மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ம.தி.மு.க. ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் பொதுச்சின்னம் பட்டியலில் பம்பரத்தை ஒதுக்க முடியாது” என்று வாதிட, ம.தி.மு.க. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக வாதிட்டார்.

பானைச் சின்னம் கேட்டு வி.சி.க. வழக்கு!

இதற்கு விளக்கம் அளித்த இந்திய தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், “ஒரே மாநிலத்திற்குள் ஒன்றுக்கும் அதிகமான தொகுதியில் போட்டியிட்டால் தான் பம்பரம் சின்னம் ஒதுக்க முடியும்” என்றனர்.

தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் வழக்கில் தீர்வு காண இயலாது எனக் குறிப்பிட்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

santhosh

Recent Posts

த.வெ.க கட்சி கொடி தொடர்பாக புதிய சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…

ஆகஸ்ட் 22, 2024 5:04 மணி

கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்

கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…

ஆகஸ்ட் 17, 2024 4:52 மணி

ராஜீவ்காந்தி மருத்துவமனை- மருத்துவ மாணவர்கள் ,கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…

ஆகஸ்ட் 16, 2024 5:24 மணி

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ஆகஸ்ட் 9, 2024 4:02 மணி

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிட பிரான்ஸ் சென்றார் – உதயநிதி ஸ்டாலின்

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…

ஆகஸ்ட் 8, 2024 5:39 மணி

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…

ஆகஸ்ட் 7, 2024 5:47 மணி