நீலகிரி மாவட்டத்தில் வடமாநில பெண்ணிடம் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்த போது, அந்த பெண் கதறி அழுதார்.
குன்னூர்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியின் காரை சோதனையிட்ட போது, ரூபாய் 69,000 ரொக்கம் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அப்போது, தங்களின் செலவுக்கு வேறு பணம் எதுவும் இல்லை என்றும், பணத்தைத் திரும்பத் தருமாறும் கூறி அந்த பெண் கதறி அழுதார்.
செலவிற்கு வேறு பணமில்லை எனக் கூறி கதறி அழுத வடமாநில பெண்!
இதனிடையே சுற்றுலாப் பயணிகளிடம் பணத்தைப் பறிமுதல் செய்தது தொடர்பாக, சம்மந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…