நாடாளுமன்ற தேர்தலையொட்டி பெரியபாளையம் அருகே வடமதுரையைச் சேர்ந்த பொதுமக்கள் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்து வருகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியளவில் தொடங்கியது. பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் உட்பட பல்வேறு வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள். இதில் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம் பேர் ஆகும்.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் பெரியபாளையம் அருகே வடமதுரையில் பொதுமக்கள் வாக்களிக்காமல் தங்களின் வாக்கினை புறக்கணித்து வருகின்றனர். இதற்கு காரணம் என்னவென்றால் வடமதுரை பெரியகாலனி என்ற பெயரை எர்ணாங்குப்பம் என மாற்றியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்து தங்களது வாக்கினை செலுத்தாமல் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…
கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…
கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…
ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…
ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…