தமிழ்நாடு

காவல் நிலையத்தில் விசாரணையின் போது ஒருவர் மரணம்

காவல் நிலையத்தில் விசாரணையின் போது ஒருவர் மரணம்

காவல் நிலையத்தில் விசாரணையின் போது ஒருவர் இறந்து போன சம்பவத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவை தரக்கோரி உதவி கமிசனரிடம் மனு அளித்துள்ளனர்.

கை கால்களை உடைத்து விட்டு இருக்கலாமே கொன்னுட்டாங்களே என அழுதபடி உறவினர் ஆதங்கம்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், பாஜக நிர்வாகியுமான பி.பி.ஜி. டி.சங்கர் கடந்தாண்டு காரில் சென்று கொண்டிருந்தார். நசரத்பேட்டை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கச்சிபட்டு பகுதியை சேர்ந்த சாந்தகுமார்(29), ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி வார்டு உறுப்பினராக இருந்து வந்த இவர் உட்பட ஏழு பேரை நசரப்பேட்டை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சிறையில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியே வந்த சாந்தகுமார் மற்றும் அவருடன் இருந்தவர்கள் செவ்வாய்பேட்டையில் உள்ள நண்பரின் வீட்டில் தங்கி இருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக சாந்தகுமார் உள்ளிட்ட ஏழு பேர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் சென்ற போலீசார் சாந்தகுமார் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து சரமாரியாக தாக்கியதில் சாந்தகுமார் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து போனார்.

இதையடுத்து அவரது உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் தாக்கியதால் தனது கணவர் இறந்து போனதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் இறந்து போன சாந்தகுமார் உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சாந்தகுமாரை போலீசார் கைது செய்த இடத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வழக்கு விசாரணைக்காக பாதுகாத்து தர வேண்டும் என அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் உறவினர்கள் பூந்தமல்லி உதவி கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர்.

இதையடுத்து அவர்கள் கூறுகையில், தனது கணவரை வேண்டுமென்றே பணத்தை பெற்று கொண்டு போலீசார் கொலை செய்துவிட்டதாகவும் இந்த சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அனைத்து போலீசாரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

https://www.mugavari.in/news/tamilnadu-news/satyapradha-sahu-press-meet/1287

தமிழக அரசு தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனவும் அதுவரை தனது கணவரின் உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்து விட்டு சென்றனர். கொலை வழக்கில் சிறையில் இருந்து வந்தவர் போலீஸ் விசாரணையில் இறந்து போன சம்பவத்தில் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் பதிவுகளை கேட்டு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அங்கு வந்த இறந்து போன சாந்தகுமாரின் உறவினர் ஒருவர் கை, கால்களை உடைத்து விட்டு இருக்கலாமே உயிரை எடுத்து விட்டார்களே என சோகமாக அழுதபடி பேசியது சோகத்தை ஏற்படுத்தியது.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி