தமிழ்நாடு

குடிபோதையில் தகராறு – ஒருவர் பலி

குடிபோதையில் தகராறு – ஒருவர் பலி

குன்றத்தூர் அருகே சாலையோரத்தில் குடிபோதையில் படுத்திருந்த நபரிடம் தகராறு தலையில் கட்டையால் தாக்கியதில் ஒருவர் பலி.

 

குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியில் சாலை ஓரத்தில் சிலர் தாக்கி கொள்வதாக வந்த தகவலையடுத்து ரோந்து பணியில் இருந்த மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சாலையோரத்தில் படுத்திருந்த நபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் குன்றத்தூர் அடுத்த சின்னபனிச்சேரி பகுதியை சேர்ந்த யுவராஜ்(35), என்பதும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

நேற்று இரவு குடிபோதையில் சம்பவம் நடந்த இடத்தில் சாலை ஓரத்தில் படுத்திருந்தபோது கோவூரை சேர்ந்த கணேஷ் என்பவர் குடிபோதையில் அங்கு வந்த போது யுவராஜ் படுத்திருப்பதை பார்த்து அவரிடம் தகராறு செய்த நிலையில் இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டதாகவும் பின்னர் போதையில் வந்த கணேசின் நண்பர்கள் யுவராஜை சரமாரியாக கல்லாலும், கட்டையாலும் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனது தெரிய வந்தது.

https://www.mugavari.in/news/tamilnadu-news/world-record-of-a-4-year-old-boy/3074

இதையடுத்து கணேசனை மாங்காடு போலீசார் கைது செய்து விசாரித்து வரும் நிலையில் இந்த சம்பவத்தில் வேறு யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் சாலையோரத்தில் படுத்திருந்தபோது ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsdesk

Recent Posts

த.வெ.க கட்சி கொடி தொடர்பாக புதிய சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…

ஆகஸ்ட் 22, 2024 5:04 மணி

கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்

கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…

ஆகஸ்ட் 17, 2024 4:52 மணி

ராஜீவ்காந்தி மருத்துவமனை- மருத்துவ மாணவர்கள் ,கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…

ஆகஸ்ட் 16, 2024 5:24 மணி

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ஆகஸ்ட் 9, 2024 4:02 மணி

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிட பிரான்ஸ் சென்றார் – உதயநிதி ஸ்டாலின்

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…

ஆகஸ்ட் 8, 2024 5:39 மணி

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…

ஆகஸ்ட் 7, 2024 5:47 மணி