மக்களவை தேர்தலையொட்டி சென்னை நெற்குன்றத்திலுள்ள ஆர்.எம்.பள்ளியில் வாக்களித்தார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு.
மக்களவை தேர்தலானது (2024) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவானது மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக 1,58,568 மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது
இந்நிலையில் சென்னை நெற்குன்றம் ஆர்.எம்.பள்ளியில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தனது வாக்கினை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் அமைதியான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சில இடங்களில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. அவை உடனடியாக சரி செய்யப்பட்டன. மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் சோதனை நடத்தி வருகின்றனர். எனத் தெரிவித்தார்.
நடிகை மற்றும் பாஜக மக்களவை உறுப்பினருமான கங்கனா ரனாவத் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘எமர்ஜென்சி’. இப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக…
நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளது. பண மோசடியில் தொடர்புடையதாக கூறப்படும் செயலி விளம்பர…
ம.பி.யில் சத்தமான DJ இசைக்கு நடனமாடிய 13 வயது சிறுவன் உயிரிழந்திருக்கிறான். மத்தியப் பிரதேசத்தின் போபாலில் DJ இசைக்கு நடனமாடிய…
தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுத்து, கனமழை பெய்த 15, 16 ஆகிய தேதிகளில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 3844 கர்பினிகளுக்கு…
அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஏர்ஸில், செல்போனை பார்த்து கொண்டே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் நூலிழையில் உயிர் தப்பியது…
ஆவடி ரயில்வே கால்வாயில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விழுந்து சிக்கிய பசுமாட்டை தீயணைப்பு துறை வீரர்கள் போராடி மீட்டனர்.…