நாடாளுமன்ற தேர்தலையொட்டி மயிலாடுதுறை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாளை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மயிலாடுதுறையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் காளியம்மாள் அவர்களை ஆதரித்து நேற்று மயிலாடுதுறை விஜயா திரையரங்கம் அருகில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது, ஒரு காலம் வரும் ஊழல் லஞ்சம் என்கிற வார்த்தை அழிந்து போகும். பசி என்கிற சொல்லே தாய் தமிழகத்தில் இல்லாமல் ஒழியும். மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன் நாங்கள் வரும் போது இந்த மண் சொர்க்கமாக மாறும். தண்ணீரில் தேவையில் தன்னிறைவை அடைவோம். 4500 டிஎம்சி தண்ணீர் எனக்கு கிடைக்கிறது. 1500 டிஎம்சி தண்ணீர் தான் வருகிறது. மீதி கடலில் கலக்கிறது அதை சேமிப்பேன். கணக்கில்லாத நீர்த்தேக்கங்களைஉருவாக்குவேன். 100 ஏக்கர் 200 ஏக்கர் என நீர்த்தேங்கங்கள் முழுவதும் துணை காவல்படையை உருவாக்குவேன். பிளாஸ்டிக்கே என் மண்ணுள் நுழையாது.
மேலும் பேசிய அவர் ஒரு சீமை கருவேல மரங்களை கேரளாவில் காட்டிப்பார். அவர்களால் முடியும் நம்மால் முடியாதா? இங்க நமக்கு அப்படியில்லையே எங்க பாத்தாலும் சீமை கருவேல மரங்கள். மாணவனா நூறு மரங்கள் நட்டினால் பிராக்டிக்கல் மார்க் போடனும். ஒவ்வொரு பிறந்த நாளுக்கு மரம் என் பிள்ளைகளுக்கு சொல்லுவேன். உனக்கு பிடித்த பேரை மரத்திற்கு வை மரங்களுடன் பேசுங்கள். எல்லாவற்றிக்கிற்கும் உயிர் இருக்கு உணர்ச்சி இருக்கு என இவ்வாறு பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…
கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…
கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…
ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…
ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…