குறைந்தது தங்கம் விலை… இல்லத்தரசிகள் ஆறுதல்…
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.51,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,455க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.51,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை உயர்ந்ததை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிகரித்தது. ஒரு கிராம் வெள்ளியானது கிராமுக்கு ரூ.60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.60-க்கும், கிலோவுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.81,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.6,430க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.51,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை தொடர்ந்து ரூ.40 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82.00-க்கும், கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு கிலோ வெள்ளி ரூ.82,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் ஆறுதல் அளித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…
கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…
கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…
ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…
ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…