வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – 3 பேர் கைது

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – 3 பேர் கைது

திருப்பத்தூர் வாலிபரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த பீகாரை சேர்ந்த 3 பேர் கைது செய்தனர்.

திருப்பத்தூரை சேர்ந்த வாலிபரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த பீகாரை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூரை சேர்ந்தவர் மோனிஷ் (வயது 19). இவரது செல்போனுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில்  பீகார் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் வேலை இருப்பதாகவும், அதற்கான தங்கள் கல்வி சான்றிதழை அனுப்பி வைக்கவும் என குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதை நம்பிய மோனிஷ் அவர்கள் கேட்ட சான்றிதழ்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி உள்ளார். சிறிது நேரத்துக்கு பிறகு அவர்கள் மோனிசை தொடர்பு கொண்டு தங்களுக்கு வேலை உறுதியாகிவிட்டது. அதற்காக நாங்கள் கொடுக்கும் வங்கி கணக்கிற்கு குறிப்பிட்ட பணத்தை அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதற்கு மோனிசும் சம்மதித்து உடனே அவர்கள் அனுப்பி வங்கி கணக்கிற்கு ரூ.6 லட்சத்து 53 ஆயிரத்து 583 ரூபாய் அனுப்பி உள்ளார். இதையடுத்து அவர்கள் ஓரிரு நாட்களில் உங்கள் முகவரிக்கு பணியானை வந்துவிடும், அதன் பிறகு நேரில் வந்து வேலையில் சேர்ந்து கொள்ளலாம் என கூறியுள்ளனர்.

ஆனால் ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் எந்த  பணியானையும் வராததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மோனிஷ் இதுகுறித்து திருப்பத்தூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், பீகார் மாநிலத்தை சேர்ந்த  முகேஷ்குமார், ஜித்தேந்திர குமார், அமன்குமார் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.

https://www.mugavari.in/tamilnadu-weather-report-3/

இவர்கள் இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு ஜார்கண்ட் மாநிலம் ஆசாரிபாத் மாவட்டம், கோரா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கடந்த 27 ஆம் தேதி திருப்பத்தூர் சைபர் க்ரைம் போலீசார் ஜார்கண்ட் மாநிலம் சென்று சிறையில் உள்ள மூன்று பேரையும் மேல் விசாரணைக்காக திருப்பத்தூர் அழைத்து வந்தனர்.

மேலும் இவர்கள் வேலூர் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் போலீசார் விசாரணை செய்து இரு நாட்களுக்குள் மீண்டும் ஜார்க்கண்ட் மாநில சிறையில் ஒப்படைக்க போவதாக  போலீசார் கூறினர்.

Newsdesk

Recent Posts

த.வெ.க கட்சி கொடி தொடர்பாக புதிய சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…

ஆகஸ்ட் 22, 2024 5:04 மணி

கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்

கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…

ஆகஸ்ட் 17, 2024 4:52 மணி

ராஜீவ்காந்தி மருத்துவமனை- மருத்துவ மாணவர்கள் ,கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…

ஆகஸ்ட் 16, 2024 5:24 மணி

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ஆகஸ்ட் 9, 2024 4:02 மணி

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிட பிரான்ஸ் சென்றார் – உதயநிதி ஸ்டாலின்

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…

ஆகஸ்ட் 8, 2024 5:39 மணி

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…

ஆகஸ்ட் 7, 2024 5:47 மணி