தமிழ்நாட்டில் நீலகிரி உட்பட 18 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்கி மே 28-ந் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி வெயில் நீடிக்கும். தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் அனேக இடங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசுவதால் வெயில் சுட்டெரிக்கும் எனவும், இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அளவு கூடும். எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.