திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1,112 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய முனையத்தை கடந்த ஜனவரி மாதம் 2ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
சென்னையில் இருந்து திருச்சி வந்த இண்டிகோ விமானம் முதலாவதாக புதிய முனையத்திற்கு வந்தது. அந்த விமானத்திற்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து(வாட்டர் சல்யூட்) வரவேற்பு கொடுக்கப்பட்டது. இன்று வருகை தரும் புறப்படும் பயணிகளுக்கு இனிப்புகளை விமான நிலைய அதிகாரிகள் கொடுத்து புதிய முனைய செயல்படும் நிகழ்வை கொண்டாடினர்.
புதிய முனையத்தில் ஆண்டுக்கு 45,00,000 பயணிகளை கையாள முடியும் அதே நேரத்தில்,10 விமானங்களில் வந்து செல்லும் 3000 பயணிகளை கையாளலாம். ஒரு மணி நேரத்திற்கு 12 விமானங்கள் தர இறங்கவும் புறப்பட்டும் செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
ஒரு நாளில் குறைந்த பட்சம் 240 விமானங்கள் வந்து செல்லும் வகையில் தொழில்நுட்ப வசதி இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 75,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைகள் 750 கார்கள், 250 வாடகை கார்கள், 10 பேருந்துகள் நிறுத்த வாகன நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
60 வருகை கவுண்டர்கள், 44 புறம்பாடு கவுண்டர்கள் என மொத்தம் 104 நுழைவு கவுண்டர்களுடன் புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…
கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…
கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…
ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…
ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…