தூத்துக்குடியில் நீட் தேர்வு மையத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை தடுக்க நமக்கு நீட் தேர்வில் இருந்து விளக்கு கிடைக்க வேண்டும்.
நீட் தேர்வுக்கு விளக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு ஆட்சி மாற்றத்தில் தான் உள்ளது எனவும் ஆட்சி மாற்றம் நிகழும் போது எல்லாம் நல்லதாகவே நடக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தில் ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் மற்றும் வெளிநாட்டில் படிக்கும் கல்வி ஆலோசகர்கள் நடத்தும் 2024 கிற்கான ரஷ்ய கல்வி கண்காட்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த கல்வி கண்காட்சியில் இந்தியாவில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் தூதரகத்தின் அதிகாரி ஒலெக் அவ்தேவ், ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் இயக்குநர் அலெக்சாண்டர் டோடோனோவ், பயோடெக்னாலஜி துறை தேசிய ஆராய்ச்சி அணு பல்கலைக்கழத்தின் பேராசிரியர் எலெனா சரபுல்ட்சேவா, Propaedeutics துறையின் இணைப் பேராசிரியர் விக்டோரியா நௌமோவா, பொது நோயியல் துறை, மருத்துவ சொற்களஞ்சியத்தின் இணை பேராசிரியர் திமூர் அக்மெடோவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் , ”கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து இந்த கண்காட்சியை நான் தொடங்கி வைத்து வருகிறேன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நீட் தேர்வு மையத்தில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பான கேள்விக்கு, தேர்தல் நடத்தை விதிகள் இருப்பதால் எதையும் ஆய்வு செய்யவும், பெரிய அளவிலான கருத்துக்கள் தெரிவிக்கவும் முடியாத நிலையில் இருக்கிறேன். என்றாலும் இதற்கெல்லாம் ஒரே தீர்வு நீட் தேர்வில் இருந்து விளக்கு.
நீட் தேர்வுக்கு விளக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு ஆட்சி மாற்றம். ஆட்சி மாற்றம் நிகழும் போது எல்லாம் நல்லதாகவே நடக்கும் என கூறினார். கேரளாவில் பரவி வரும் வெஸ்ட் நைல் வைரஸ் தொற்றுக்கு பதிலளித்து பேசிய அவர், பொது சுகாதாரத்துறை இன்றைக்கு மிகச் சிறப்பாக நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக எந்த ஒரு புதிய நோய் பாதிப்பாக இருந்தாலும் கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லைகளில் தீவிரமாக கண்காணிப்பு நடைபெற்று வருகிறது என மேலும் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…
கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…
கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…
ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…
ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…