தமிழ்நாடு

நகர்ப்புற மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் – ராதாகிருஷ்ணன்

நகர்ப்புற மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் – ராதாகிருஷ்ணன்

சென்னையில் வாக்குப்பதிவு குறைவதற்கு நகர்ப்புற சுணக்கமும் வெயிலின் தாக்கமும் காரணம் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாநகராட்சி ஆணையருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் சென்னை லயோலா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மின்னணு வாக்குபதிவு இயந்திங்கள் வைக்கப்பட்ட பின்பு பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

ஆய்விற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், சென்னையில் 48.60 லட்சம் வாக்குகள் பதிவாகிவுள்ளதாகவும், மூன்று தொகுதியையும் சேர்த்து 56.01 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது என்றார். வட சென்னையில் 60.13 சதவீத வாக்குகளும், தென் சென்னையில் 54.27 சதவீதமும், மத்திய சென்னையில் 53.91 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளதாக கூறினார்.

சென்னையில் கட்காபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் 70 சதவீதமும், ஒட்டுமொத்தமாக கணக்கெட்டு பார்க்கையில் நகர்புறங்களில் ஏற்படும் சுணக்கம் மற்றவர்கள் வாக்களிக்கிறார்களே நாங்கள் வாக்களித்தால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது என்று காரணத்தினாலும், மதிய வேலைகளில் ஏற்பட்ட வெயிலின் தாக்கத்தினாலும் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது என்றார்.

47 வகையில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அதன் அடிப்படையிலேயே தற்போது இந்த வாக்கு சதவீதம் பதிவாகி இருக்கிறது இல்லையென்றால் இது மேலும் குறைந்திருக்க கூடும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

லயோலா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறை பகுதியில் 188 கேமரா பொருத்தப்பட்டுள்ளதாகவும், நான்கு அடுக்கு பாதுகாப்பு 24 மணி நேரமும் போடப்பட்டு இருப்பதாக கூறினார்.

முதல் அடுக்கில் மத்திய ஆயுதப்படையும், இரண்டாவது அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் துறையினரும், மூன்றாவது அடுக்கில் ஆயுதப் படையும், நான்காவது அடுக்கில் தமிழக காவல் துறையினர் இருப்பார்கள். மொத்தமாக 1095 பேர் பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.

ஒருவேளை அந்த அறையை திறக்க வேண்டும் என்றால் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன், பல அடுக்கு அனுமதி வாங்கிய பிறகுதான் உள்ளே செல்ல முடியும் என்றார். இந்தப் பகுதி ஜூன் நான்கு வரை இந்தப் பகுதி தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும்.

சென்னையில் 2019 தேர்தலை விட இந்த முறை நான்கு விழுக்காடு குறைந்துள்ளது என்று தெரிவித்த அவர் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் 52.4 சதவீத வாக்குகள் தான் பதிவாகியுள்ளதாகவும், பல்வேறு காரணங்களால் சிலரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். சில நேரங்களில் தவறுதலாக சிலர் நீக்கப்படுதலும் நடந்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரையில் அனைத்து வழிக்காட்டு நெறிமுறைகளையும் முடித்த பிறகுதான் சேர்த்தல் நீக்கல் நடக்கும் என்று தெரிவித்தார்.

மக்களும் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் வாக்கு இருக்கும் என்று நினைக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.

https://www.mugavari.in/news/tamilnadu-news/today-gold-rate-7/1506

அதிகாரப்பூர்வமாக பூத் ஸ்லீப் கொடுக்கப்பட்டு இருந்தால் கண்டிப்பாக அது தவறாது. ஆனால் பழைய தகவல்களை வைத்து பூத் ஸ்லீப் கொடுக்கப்பட்டு இருக்கலாம். அதை தடுக்க கூடுதல் விழிப்புணர்வு உண்டாக்கப்படும். தமிழகத்தில் தேர்தல் கட்டுப்பாடுகள் குறித்து படிப்படியாக இந்திய தேர்தல் ஆணையத்தில் இருந்து விதிவிலக்குகள் அறிவிக்கப்படும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஒரே சின்னத்திற்கு வாக்கு பதிவானதாக வரும் தகவல்கள் முற்றிலும் தவறானது என்றும் வியாசர்பாடி மற்றும் மத்திய சென்னையில் உள்ள பூத்தில் டெஸ்ட் ஓட்டு போட்டு, அவர்களுக்கு சுமூகமாக விளக்கம் அளிக்கப்பட்டது என்றார். சென்னையில் பெரிய அளவில் எங்கும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதாகவில்லை என்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsdesk

Recent Posts

த.வெ.க கட்சி கொடி தொடர்பாக புதிய சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…

ஆகஸ்ட் 22, 2024 5:04 மணி

கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்

கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…

ஆகஸ்ட் 17, 2024 4:52 மணி

ராஜீவ்காந்தி மருத்துவமனை- மருத்துவ மாணவர்கள் ,கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…

ஆகஸ்ட் 16, 2024 5:24 மணி

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ஆகஸ்ட் 9, 2024 4:02 மணி

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிட பிரான்ஸ் சென்றார் – உதயநிதி ஸ்டாலின்

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…

ஆகஸ்ட் 8, 2024 5:39 மணி

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…

ஆகஸ்ட் 7, 2024 5:47 மணி