கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தபோது வைத்திலிங்கம், அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்கிய விவகாரத்தில் தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்தியலிங்கம் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிவத்தனையில் ஈடுபட்டதாக கூறி வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 11 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அவரது எம்எல்ஏ விடுதி அறையிலும், அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவரது அறையின் சாவியை பெற்று அமலாக்கத்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர்த்து மேலும் 4 இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மரகத நாணயம் 2 திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் இணைவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏ ஆர்…
நடிகர் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன் தாம் என்றும் அவரைப் போல யாரும் இருக்க முடியாது என்றும் நடிகர் துல்கர்…
முஸ்லிம் இளைஞர் ஒருவர் அல்ஜீரிய பெண்ணை 3வது திருமணம் செய்த சான்றிதழை தானே குடிமை அமைப்பு நிராகரித்துள்ளது. இது தொடர்பான…
வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்ட 3 பேர் பணியிடை…
நடிகை பூமிகா சாவ்லா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்து பெயர் பெற்றுள்ளார். இவர்…
குமரியில் கணவன் அருகே அமரக்கூடாது என மாமியார் கொடுமை செய்வதாக கூறி திருமணமான 6 மாதங்களில் பெண் தற்கொலை செய்துள்ளார்.…