செய்திகள்

லஞ்சம் வாங்கிய மனைவியை வட்டமிட்டு சிக்க வைத்த கணவர்.

கரை படிந்த கை என மனைவியை வட்டமிட்டு வீடியோ எடுத்த கணவர்
தெலங்கானாவில் மனைவி தொடர்ந்து லஞ்சம் வாங்கி கொண்டு வீட்டிற்கு வருவதாக கூறி கணவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தின் மணிகொண்டா நகராட்சி டி.இ.இ திவ்யா ஜோதி தினந்தோறும் லஞ்ச பணத்துடன் வீட்டிற்கு வருவதாக அவரது கணவர் ஸ்ரீபத் வீட்டில் உள்ள பணத்துடன் வீடியோ எடுத்து ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.

மணிகொண்டா நகராட்சியில் டி.இ.இ. யாக பணி புரியும் ஜோதி – ஸ்ரீபத் தம்பதிக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் மனைவி ஜோதி ரூ. 20 முதல் 30 லட்சம் வரை ஒப்பந்ததாரர்களிடம் பணம் லஞ்சமாக பெற்று தினந்தோறும் வருகிறார் எனவும் எத்தனை முறை சொல்லியும் மனைவி ஜோதி லஞ்சம் வாங்குவதை கைவிடவில்லை எனவும் இதனால் லஞ்சம் வாங்குவது தொடர்பாக கணவன், மனைவி இடையே நீண்ட நாட்களாக தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

லஞ்சம் வாங்குவது குற்றம், பாவம் என்று கணவன் சொல்லிக்கொண்டே இருந்தாலும் மனைவி ஜோதி அதைப் பொருட்படுத்துவதில்லை. லஞ்சம் வாங்கக் கூடாது என்று கணவன் சொல்லும் போதெல்லாம் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீபத் லஞ்சப் பணத்தை மனைவி வீட்டில் பல இடங்களில் மறைத்து வைத்திருந்ததை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேறிய விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏழு ஆண்டுகளாக லஞ்சம் வாங்குவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாகவும் அவரது கணவர் தெரிவித்துள்ளார். தனது மனைவி ஒரு நாள் கூட லஞ்சம் வாங்காமல் வீட்டுக்கு வந்ததில்லை எனவும் கமிஷன் வடிவில் லஞ்சம் வாங்கி, பணத்தை வீட்டுக்கு கொண்டு வந்து, தனக்கு தெரியாமல் ரகசியமாக மறைத்து வைக்கின்றார். இருப்பினும் வீட்டில் உள்ள பீரோ , வார்ட்ரோப்களில் புடவைகளுக்கு இடையே, பேப்பர்களுக்கு இடையே, சாமி அறைக்குள், சாமி படங்களுக்குப் பின்னால், ஷூ ஸ்டாண்டில் கூட மனைவி பணத்தை மறைத்து வைத்திருப்பதை வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்துள்ளார். மொத்தம் 80 லட்சம் ரூபாய் மறைத்து வைத்திருப்பதாக கணவர் கூறியுள்ளார்.

மேலும் லஞ்சம் வாங்க வேண்டாம் என மனைவியிடம் கூறிய சமயத்தில் எல்லாம் இருவருக்கும் இடையே பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளது. சண்டையிடும் போதெல்லாம் அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் வாங்க ஊக்குவிப்பதாகவும், அவர்களின் அழுத்தத்தை தாங்க முடியாமல் லஞ்சம் வாங்குவதாகவும் கணவரிடம் கூறி உள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகள் தெரிய வந்ததால் இரண்டு நாட்களுக்கு முன்பு ஜோதி ஐதாராபாத் மாநகராட்சிக்கு பணியிடம் மாற்றப்பட்டதாகவும் கணவர் ஸ்ரீபத் தெரிவித்துள்ளார்.

 

Newsdesk

Recent Posts

ஜெயிலர் 2’ படத்தில் தனுஷ்…. உண்மையா? வதந்தியா?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நெல்சனுக்கும், ரஜினிக்கும் இந்தப்…

அக்டோபர் 22, 2024 5:48 மணி

‘பார்க்கிங்’ பட இயக்குனரிடம் கதை கேட்ட சிவகார்த்திகேயன்…. அடுத்த படம் ரெடி!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண்…

அக்டோபர் 22, 2024 5:20 மணி

பகையாளியை பங்காளியாக்கிய இந்தியா- முதன் முறையாக முன் வந்த சீனா..!

கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது. சமீபத்திய ஒப்பந்தம்…

அக்டோபர் 22, 2024 4:18 மணி

ஆலோசகர் இல்லாமல் தடுமாறும் தலைவா் விஜய் – தவெக முதல் அரசியல் மாநாடு பரபரப்பு தகவல்

தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் அரசியல் மாநாட்டை அக்டோபர் -27 ல் நடத்தவுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அருகில்…

அக்டோபர் 21, 2024 5:46 மணி

விமல், யோகி பாபு கூட்டணியின் புதிய படத்தின் – படப்பிடிப்பு நிறைவடைந்தது.

விமல் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் விமல் தமிழ்…

அக்டோபர் 21, 2024 3:19 மணி

சிதையும் சீனாவின் பொருளாதாரம் தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்க வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்களையும், பெரும் முதலீடுகளையும் சீனாவில்தான் பெரும் அளவில் வைத்திருந்தனர். சீனாவில் முதலீடு செய்வதும்…

அக்டோபர் 21, 2024 2:23 மணி