போலி என்கவுண்டர் குறித்தும் கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் குறித்தும் பேசப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படம் உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து தொடர்ந்து வெற்றிப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் டிஜே ஞானவேல், ரித்திகா சிங் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்தனர். அத்துடன் படக்குழுவினருக்கு அசைவ விருந்து படைத்து மகிழ்ந்துள்ளனர். அந்த வகையில் டி.ஜே.ஞானவேல் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் படக்குழுவினருக்கு உணவு பரிமாறும் புகைப்படங்களை லைக்கா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
மேலும் அந்த விழாவில் டிஜே ஞானவேல், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லை என்றால் வேட்டையன் படம் சாத்தியம் கிடையாது. ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய கமர்சியல் வெற்றிக்கு பிறகு கதையை சார்ந்த ஒரு படத்தில் அவர் நடித்திருக்கிறார். இந்த படைப்பு சுதந்திரத்துடன் வெளியாவதற்கு காரணமாக இருந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு எனது நன்றி. வேட்டையன் படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது;” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நெல்சனுக்கும், ரஜினிக்கும் இந்தப்…
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண்…
கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது. சமீபத்திய ஒப்பந்தம்…
தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் அரசியல் மாநாட்டை அக்டோபர் -27 ல் நடத்தவுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அருகில்…
விமல் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் விமல் தமிழ்…
சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்களையும், பெரும் முதலீடுகளையும் சீனாவில்தான் பெரும் அளவில் வைத்திருந்தனர். சீனாவில் முதலீடு செய்வதும்…