உலகம்

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு – இந்தியர்கள் மூன்று பேர் கைது

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு – இந்தியர்கள் மூன்று பேர் கைது

சீக்கிய பிரிவினைவாதியும் காலிஸ்தான் அமைப்பின் முக்கிய தலைவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியர்கள் மூன்று பேரை கனடா காவல்துறை கைது செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் வான்கூவரில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதை எடுத்து நிஜ்ஜார் படுகொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு ஒன்றிய அரசு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இந்த விவகாரம் இந்தியா கனடா இடையேயான உறவில் வெரிசலை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை குறித்து தீவிரமாக விசாரித்து வந்த கனடா காவல்துறையினர் 3 இந்தியர்களை கைது செய்துள்ளனர்.

கரன்ப்ரீத் சிங், கமல்ப்ரீத் சிங், கரன் பிரார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை குறித்தும் அவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு உள்ளதா எனவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கனடா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsdesk

Recent Posts

த.வெ.க கட்சி கொடி தொடர்பாக புதிய சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…

ஆகஸ்ட் 22, 2024 5:04 மணி

கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்

கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…

ஆகஸ்ட் 17, 2024 4:52 மணி

ராஜீவ்காந்தி மருத்துவமனை- மருத்துவ மாணவர்கள் ,கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…

ஆகஸ்ட் 16, 2024 5:24 மணி

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ஆகஸ்ட் 9, 2024 4:02 மணி

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிட பிரான்ஸ் சென்றார் – உதயநிதி ஸ்டாலின்

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…

ஆகஸ்ட் 8, 2024 5:39 மணி

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…

ஆகஸ்ட் 7, 2024 5:47 மணி